districts

img

இருளர் இன மக்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி

திருவண்ணாமலை, டிச. 9- திருவண்ணாமலை அருகே பழங்குடி மக்கள் நிலத்தை அப கரிக்க முயற்சி செய்வதை கண்டித்து வட்டாட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று (டிச. 9) ஆர்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டம் மேலத்திக்கான் எம்ஜிஆர் நகர் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த கே.ஏழுமலை குடும்பத்தி னரை, சாதிய வன்மத்தோடு நிலத்திலிருந்து அகற்றி, அந்த நிலத்தை அபகரிக்கத் துடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுபவ பாத்திய அடிப்படையில் 7 குடும்பத்தினர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.ஏகாம்பரம் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சர வணன் சிபிஎம் மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன் ஒன்றியச் செய லாளர் எஸ்.ராமதாஸ், சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மணி மாறன் செயலாளர் எம்.மாரி முத்து, பொருளாளர் சி.பாஸ்கரன், வழக்கறிஞர் எஸ். அபிராமன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பலராமன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.பாரி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.