districts

img

தேர்தல் முன்விரோதத்தால் தொடரும் அட்டூழியம் விவசாயிகள் சங்கத் தலைவர் வீட்டை இடித்த ரவுடி கும்பல்

திருவண்ணாமலை, நவ.20-  திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசி அடுத்த மங்கலம்- மாமண்டூர், கீழ் கொடுங்கலூர் கூட்டுச் சாலையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பெ.அரிதாசுவின் வீடு உள்ளது. அந்த வீட்டு கட்டிடத்தின் ஒரு பகுதியை மாமண்டூர் ரவுடி கும்பல் இடித்து தள்ளி அட்டூழியம் செய்துள்ளது. ஊராட்சி மன்றத் தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. மங்கலம்-மாமண்டூர் ஊராட்சிமன்ற தேர்தலின்போது தலைவர் பதவிக்கு பெ.அரிதாசு போட்டியிட்டார். தோல்வி பயத்திலிருந்த எதிர் தரப்பு வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டார். இதனால்,  அரிதாசுக்கு ஆதரவாக செயல்பட்ட வர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நிர்வாகிகள் உள்ளிட்டோரை ஊராட்சிமன்றத் தலைவரின் தூண்டு தலின்பேரில் அவரது ஆதரவாளர்கள் வார்டு உறுப்பினர்கள் பலமுறை தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை கும்பல் 2020 ஆம் ஆண்டு முதல் அரிதாசு தரப்பி னரை தொடர்ந்து அச்சுறுத்தி வரு கிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது,அரிதாசுவின் வீடு இடிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் குறித்து  கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்  பட்டுள்ளது.  இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், வட்டாரச் செயலாளர் அப்துல்காதர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.   பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,“ தொடர்ச்சி யாக வன்முறையில் ஈடுபடும் ரவுடி களின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.