திருவண்ணாமலை மாவட்டம் அன்மருதை கிராமத்தில் 19 பழங்குடியினர் குடும்பங்களுக்குப் பட்டாவுடன் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்ட நிலையில், பட்டாவுடன் அரசு வீடும் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணைகளை 19 குடும்பங்களும் பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வழங்கினார். கட்சியின் பெரணமல்லூர் ஒன்றியச் செயலாளர் ந.சேகரன் உடன் இருந்தார்.