districts

img

பழங்குடிஇன மக்களுக்கு 2 மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை

திருவண்ணாமலை,ஜூன்20-  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவில் உள்ள பழங்குடியின காட்டுநாயக்கன், இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா, இனச் சான்று, குடும்ப அட்டை ஆகிய வற்றை வழங்க கோரி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில், செய்யாறு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு பழங்குடியி னர் ஆன்றோர் மன்ற உறுப்பினர் இரா. சரவணன் தலைமை தாங்கினார்.

விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.உதயகுமார், காட்டு நாயக்கன் சங்க பொதுச்செயலாளர் அய்யனார், மலை சங்க மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்யாறு தாலுகாவிற்கு உட்பட்ட தேத்துறை, மாளிகைப்பட்டு, செங்காடு, இளநீர் குன்றம், வாக்கடை, மேல்நெமிலி, திருமணி, வேலியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 இதை யடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய செய்யாறு வட்டாட்சியர்,  பழங்குடியின மக்களுக்கு 2 மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.