திருப்பூரில் அனைத்து வகை நூல் ரகங்களுக்கான விலையில் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல். நூல் விலை உட்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழிற்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நூலின் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள். ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த மாதம் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன.
இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ 20ஆவது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.335லிருந்து ரூ.365 ஆக உயர்ந்துள்ளது.