திருப்பூர், டிச.29- திருப்பூரில் ரேசன் கடைகளில் தமி ழக அரசு அறிவித்துள்ள ரூ.2500 பொங்கல் பரிசுக்கான டோக்கன் களை அதிமுகவினர் நேரடியாக வீடு, வீடாகச் சென்று விநியோகம் செய்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அனைத்துக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சி யரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக, திமுக மாநகரச் செயலாளர் மு.நாகராசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி, காங்கிரஸ் மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.கிருஷ்ணன், கொம தேக மாவட்ட வர்த்தக அணிச் செயலா ளர் ஏ.பி.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் க.விஜய கார்த்திகேயனை நேரில் சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது, தை பொங்கலை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள ரூ.2500 பொங் கல் பரிசு டோக்கனை வீடு, வீடாக அரசு ஊழியர்கள் விநியோகம் செய் கின்றனர்.
ஆங்காங்கே அந்த ஊழியர்க ளுடன் உள்ளூர் அதிமுக-வினரும் சென்று டோக்கன் வழங்கி வருகின்ற னர். மக்களின் வரிப்பணத்தில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவியை, அதி முகவினர் தங்கள் கட்சியின் சார்பாக இந்தத் தொகை கொடுப்பதைப் போன்று சித்திரத்தை சுயநல நோக்கத் தோடு உருவாக்கி வருகின்றனர். தமிழ் நாட்டில் தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு செய்வது அப்பட்டமான சட்ட மீறலாகும். எனவே, டோக்கன் வழங்க அரசு ஊழியர்கள் தவிர மற்றவர்கள் செல் வதை அனுமதிக்கக் கூடாது.
அதை மீறி மற்றவர்கள் சென்றால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உத்த ரவு பிறப்பிக்க வேண்டும். இந்த அத்து மீறல் மீண்டும் தொடர்ந்தால் மக்க ளைத் திரட்டி கடும் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சி யர் விஜயகார்த்திகேயன் கூறியதாக அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.