திருப்பூர், ஜூலை 14 – திருப்பூரில் சாமுண்டிபுரம் சாலை இரண்டு ஆண்டுக்கு மேலாக சீர்செய்யப்படாத நிலையில் இப்ப குதியில் இயக்கப்பட்டு வந்த பேருந்து போக்குவரத்து முடங்கி, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பிரிவில் இருந்து சாமுண்டிபுரம் செல்லக்கூடிய சாலை போக்குவ ரத்து முக்கியத்துவம் வாய்ந்ததா கும். குமார் நகரில் தொடங்கி சாமுண் டிபுரம் வரை உள்ள குடியிருப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சாமானிய மக்கள் வசித்து வருகின் றனர். அத்துடன் குமார் நகர் பள்ளிக் கூடம், செல்லம்மாள் காலனி பள்ளிக் கூடம் மற்றும் தனியார் மருத்துவம னைகளும் உள்ளன. பெரும்பாலும் பனியன் தொழிலாளர்கள் குடும்பங் களும், தினசரி கூலி வேலை செய் யும் தொழிலாளர் குடும்பங்களும் இப்பகுதியில் அடர்த்தியாக வசித்து வருகின்றனர். திருப்பூர் வீரபாண்டியில் இருந்து 15வேலம்பாளையம் வரை செல்லக் கூடிய 1 ஏ/பி என்ற வழித்தடப் பேருந்து இந்த வழியில் இயங்கி வந்தது. அத்துடன் காவிலிபாளை யம் மற்றும் வஞ்சிபாளையம் செல் லக்கூடிய சில பேருந்துகளும் இவ்வ ழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா பொது முடக்கத்தின்போது 2020 மார்ச் 25 ஆம் தேதி முதல் அனைத்து போக்கு வரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த சாலையிலும் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இப்போது வரை 27 மாதங்க ளுக்கு மேலாக பேருந்து போக்குவ ரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த சாலையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நான்காவது குடிநீர் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக குழாய்கள் பதிக் கும் பணியை மேற்கொண்டதே ஆகும்.
இத்தகைய பணிகள் செய்தால் முடிந்தவுடன் சாலைகளைச் செப் பனிட வேண்டும். ஆனால் இந்த சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் போக்குவரத்துக்கு லாயக்கில்லாமல் படு மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. கற் கள் பெயர்ந்து சிதிலமடைந்த நிலை யில் உள்ளது. மக்கள் நடந்து செல்வ தற்குக்கூட மிகவும் சிரமப்பட வேண் டிய நிலை உள்ளது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பய ணிப்பது சவாலானதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், திருப் பூரில் சீர்மிகு நகரம் திட்டத்தில் பேக் கேஜ் அடிப்படையில் பல்வேறு பகுதி களாகப் பிரித்து பணிகள் வழங்கப்பட் டுள்ளன. இதில் எவ்வித முறையான முன்னேற்பாடு, மாற்று பாதைகள், தகவல் பலகை இல்லாமல் ஆங் காங்கே அந்தந்த ஒப்பந்ததாரர்கள் பணிகளை செய்கின்றனர். குமார் நகர் பிரிவு முதல் சாமுண்டிபுரம் வரை உள்ள சாலையில் பணிகள் மேற் கொண்ட ஒப்பந்ததாரர் விபரத்தை மாநகராட்சி நிர்வாகம் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகு தியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றனர். மாமன்ற உறுப்பினர்களுக்கே எந்த தகவலும் தெரியாத நிலை உள் ளது. இது குறித்து கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் இப்பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், நாக ராஜ், குணசேகரன், தங்கராஜ் உள் ளிட்டோர் சரமாரியாக கேள்வி எழுப் பினர். இரண்டாண்டு காலமாக போக் குவரத்து முடங்கியிருக்கும் நிலை யில் இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தினர். அத்துடன் பணிகள் செய்யும் ஒப்பந் ததாரர் விபரத்தையும் தெரிவித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சீர மைத்திட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்த னப் போக்கை களைந்து லட்சம் மக் கள் வாழும் இந்த பகுதியில் மீண்டும் பேருந்து போக்குவரத்து நடைபெ றுவதற்கு உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.