அவிநாசி, ஜூலை 16- அவிநாசியில் மக்கள் எதிர்ப்பை மீறி திறக் கப்பட்டுள்ள மனமகிழ் மன்றத்தை ஜூலை 19 ஆம் தேதி முற்றுகையிடுவதென அனைத்து அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நவீன வசதிகள் கூடிய மதுபானக்கடை இரு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி மன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியும், மக்கள் எதிர்ப்பை மீறியும் இந்த மனமகிழ்மன்றம் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவிநாசி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாயன்று அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. சிபிஐ சண்முகம் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், சிபிஎம் சார்பில் ஈஸ்வ ரமூர்த்தி, பழனிச்சாமி, சிபிஐ முத்துசாமி, யாசின், அதிமுக மூர்த்தி, மதிமுக பாபு, காங் கிரஸ் சாய் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் வழிபாட்டு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்புகள் இருக்கும் பகு தியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நவீன வசதிகள் கூடிய டாஸ்மார்க் கடை திறக்கப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 19ஆம் தேதி கடையை முற்றுகை இடு வதாக தீர்மானித்தனர். மேலும் இப்போராட் டத்திற்கு அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர் களிடம் ஆதரவு கேட்க முடிவு செய்யப்பட் டது.