திருப்பூர், ஏப். 8 - 2022 மார்ச் மாதத்துடன் நிறை வடைந்த நிதியாண்டில் திருப்பூ ரின் மொத்த பின்னலாடை ஏற்று மதி ரூபாய் 33 ஆயிரத்து 525 கோடி ஆக பதிவாகி உள்ளது. அதே சமயம் திருப்பூரில் உள்நாட்டு பின்ன லாடை வர்த்தகமும் ரூபாய் 30 ஆயி ரம் கோடியை தொட்டுள்ளது. இந்தியாவின் மொத்த பின்ன லாடை உற்பத்தியில் திருப்பூரில் ஏற்றுமதி பங்களிப்பு 54.2 % ஆகும். பின்னலாடை ஏற்றுமதி, பண மதிப் பில் அதிகரித்திருந்தாலும் எண் ணிக்கை அளவில் உயரவில்லை. பஞ்சு, நூல் விலை உயர்வு உட்பட மூலப்பொருள்கள், உதிரிபாகங் கள் விலை ஏற்றம் காரணமாக உற் பத்தி செலவு அதிகரித்து இருப்ப தால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்றுமதியா ளர்கள் தரப்பில் கூறுகையில், முன்பு ஒரு பின்னலாடை 2 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட் டால், இப்போது அது 3 அமெரிக்க டாலருக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது விலை 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த 2020 - 21 நிதியாண்டில் ரூ.24,750 கோடிக்கு ஏற்றுமதி ஆகி இருந்தது. இதன்படி 50 சதவீத உயர்வு என்றால் ஏறத்தாழ 36 ஆயிரம் 400 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆக வேண்டும். ஆனால், அதை விட சுமார் 3,000 கோடி குறைவாகவே இந்த நிதியாண்டு கான ஏற்றுமதி பதிவாகி உள் ளது. மூலப்பொருள்கள் இதர உற் பத்தி பொருள்களின் விலை குறைந்தால் மட்டுமே உலகளாவிய போட்டியை தாக்குப்பிடிக்க முடி யும், இப்போதைய சூழ்நிலை தொடர்ந்து நீடிக்குமானால் திருப்பூர் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு இல்லை. எனவே, பஞ்சு நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலையை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கொள்கை ரீதியாக தலையிட வேண்டும் என்றும் ஏற்றுமதியா ளர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
அதிகரித்த உள்நாட்டு வர்த்தகம்
ஏற்றுமதி நிலவரம் இப்படி இருக்க, உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்தில் திருப்பூர் மிகப்பெ ரும் அளவு வளர்ந்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு முன்பாக ரூ. 8500 கோடியாக இருந்த திருப்பூ ரின் உள்நாட்டு பின்னலாடை வர்த் தக பங்களிப்பு, தற்போது ரூ. 30 ஆயி ரம் கோடியாக வளர்ந்து உள்ளது. ஏற்றுமதி பின்னலாடை வர்த்த கத்தில் கடும் நெருக்கடியையும், ஏற்ற இறக்கமான ஊசலாட்டத்தை யும் சந்தித்து வந்த ஒரு பகுதி தொழில் முனைவோர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்திக்கு மாறி யுள்ளனர். இந்தியாவின் பெருநக ரங்கள் மட்டுமின்றி சிற்றூர்கள் அளவிலும் பின்னலாடை நுகர்வு அதிகரித்து உள்ளதால் உள்நாட்டு சந்தை ஓரளவு விரிவடைந்து, பின்னலாடை உற் பத்தி அதிகரித்து இருக்கிறது என்றும் பின்னலாடை உற்பத்தியா ளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.