districts

நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

திருப்பூர், ஏப்.1- திருப்பூர் அருகே நகை திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். பொங்கலூர் அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பத்மா (50). இவர் கடந்த 9 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த  2 மர்ம நபர்கள், பத்மா அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கி லியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலீசார் சுங்கம் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த  2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் (36), அவரது தம்பி சரவணன் (33) என்பதும்,  பத்மாவின் தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.