திருப்பூர், ஏப்-3 பாத்திர உற்பத்தியாளர்களுடன் நடை பெற்ற பாத்திர தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. இதில், பித்தளை, செம்பு பாத்திர தொழிலாளர்களு க்கான கூலி உயர்வு 22.5 சதவிகிதமும், எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 16 சத விகிதமும் கூலி உயர்வு உடன்பாடு ஏற்பட் டது. பாத்திர தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கூட்டு குழு அமைத்து மூன்று மாதங்களாக பாத்திர தொழிற்சங்கங் கள், பாத்திரம் உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மார்ச் 31 ஆம் தேதிக் குள் இரு தரப்பினரும் கூலி உயர்வு பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாக முடிவு எடுக்கும் படி அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை யடுத்து, சனியன்று எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொ டர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்க ளுக்கு 16 சதவிகிதம் கூலி உயர்வு என முடிவா னது. இதைதொடர்ந்து, ஞாயிறன்று பித் தளை மற்றும் செம்பு பாத்திர தொழிலாளர்க ளுக்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை எவர் சில்வர் முழு கூலி பட்டறைதாரர்கள் சங்க கட் டிடத்தில் நடைபெற்றது. இதில், பித்தளை மற் றும் செம்பு பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு 22.5 சதவீதம் என உடன்பாடு ஏற் பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதில், தொழிற்சங்கங்கள் தரப்பில் சிஐடியு சார்பில் ரங்கராஜ், ஆறுமுகம், குப்பு சாமி, எல்பிஎப் சார்பில் வேலுச்சாமி, எடிபி சார் பில் தேவராஜ், எஐடியுசி சார்பில் நாகராஜ், எச்எம்எஸ் சார்பில் அப்புக்குட்டி, ஐஎன்டியுசி சார்பில் அசோக்குமார், காமாட்சியம்மன் உலோக பாத்திரத் தொழிலாளர் சங்கம் சார் பில் அர்ஜுனன், பிஎம்எஸ் சார்பில் சீனிவா சன் ஆகியோர் பங்கேற்றனர். உற்பத்தியாளர் கள் தரப்பில், முத்தையா,மனோகரன், மூர்த்தி, ரவி, ஜீவா ஆகியோர் பங்கேற்ற னர்.