திருப்பூர், பிப்.26- பல்லடம் நகரப் பகுதி யில் சாலை நடுவில் சென்டர் மீடியனில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக பாஜக கொடிகள் கட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சென்டர் மீடியனில் கட் டப்பட்டிருந்த பாஜக கொடி கள் அகற்றப்பட்டன. பல்லடம் காவல்நிலைய ஆய்வாளர் லெனின் அப்பா துரை யிடம் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர். நெடுஞ்சாலைகளில் மத்தியில் உள்ள சென்ட்ரல் மீடியனில் அரசியல் கட்சி களின் கொடிகளைக் கட்டக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது.
இதன் காரண மாக பல்லடம் நகரில் அரசி யல் கட்சிகள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு சென்டர் மீடியனில் கொடிகள் கட்ட காவல்துறை அனுமதிப்ப தில்லை. இதை ஏற்றுக் கொண்டு அனைத்து அரசி யல் கட்சிகளும் சாலைகளின் ஓரங்களில்தான் கம்புகளை ஊன்றி கொடிகளை நட்டு வருகிறார்கள். அமைச்சர் சள் பங்கேற்கும் நிகழ்வுகளி லும் இந்த நடைமுறை பின் பற்றப்படுகிறது.
இந்நிலையில் பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு பல்லடம் நகரில் அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரையிலும், தாராபுரம் சாலையிலும் சென்டர் மீடிய னில் ஏராளமான பாஜக கொடிகள் கட்டப்பட்டுள் ளன.
எனவே நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் சென்டர் மீடியனில் கட்டப்பட்டுள்ள கொடிகளை அகற்ற வேண் டும் என்று வலியுறுத்தினர். திமுக நகரச் செயலாளர் நா.ராஜேந்திர குமார், மதி முக நகரச் செயலாளர் மா. பாலசுப்பிரமணியம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், கொ.ம.தே.க. மாவட்டச் செயலாளர் கொங்கு சி.ராஜேந்திரன், காங்கிரஸ் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியத் தலைவர் கணேசன், ம.ம.க. மாவட்ட செயலாளர் முஜி புர் ரகுமான் உள்ளிட்டோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அரசியல் கட்சி நிர்வாகி கள் வலியுறுத்திய நிலை யில், பல்லடம் நகரில் சென் டர் மீடியனில் கட்டப்பட்டி ருந்த பாஜகவின் அனைத் துக் கொடிகளும் அகற்றப் பட்டன.