districts

img

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

உடுமலை  அருகே குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆமந்தகடவு ஊராட்சிக்கு உட்பட்டது அம்மாபட்டி. இங்கு செயல்பட்டு வரும் கே.2553 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி வியாழன்று விவசாயிகள்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்,  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

விவசாய கடன் பெறும் விவசாயிகளிடம் 10% வைப்புத்தொகை வேண்டுமென ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வைப்புத்தொகை விவசாயிகளின் பெயரில் இருப்பு இருக்கிறது. இருந்தபோதிலும், தற்போது சட்டத்துக்குப் புறம்பாக தன்னிச்சையாக  கடன் பெறும் விவசாயிகளிடம் கூடுதலாக வைப்புத்தொகையை கட்டாயப்படுத்தி வாங்கி வருகின்றனர்.

இந்த வைப்புத் தொகை வாங்குவதற்கு உண்டான ரசீது அல்லது பாஸ்புக் உள்ளிட்டவைகள் வழங்குவதில்லை. மேலும் கடன் பெற்றவர்களிடம் 10% கமிஷன் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மேலும் நகைக்கடன், பயிர்கடன் பெறும் விவசாயிகளிடம்  விண்ணப்ப கட்டணம்  என கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும்,  நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளிடம் கமிஷன் தொகை கேட்பதாகவும்  குற்றச்சாட்டுகள் இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மீது எழுந்துள்ளது.

எனவே, இந்த முறைகேடுகளை கூட்டுறவு சங்க பதிவாளர் அல்லது மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.