அவிநாசி, டிச.7 - திருமுருகன் பூண்டி அருகே பாரதிந கர் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடித்ததில் காயம் அடைந்த னர். அவிநாசி அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, அவர்களை, திருப்பூர் மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவிநாசி மருத்துவமனை யில் நாய்க்கடி மருந்தில்லாததால் அவர் கள் அங்கு அனுப்பப்பட்டதாக கூறப்படு கிறது.
திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட, பாரதிநகர், கோபால்டு மில் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று வெறி பிடித்து அப்பகுதியில் செல் போரை கடிக்கத் தொடங்கியது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டு அவிநாசி அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக சென்றுள் ளனர். இதில் போதிய மருந்து இல்லாத தால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூ ரிக்கு பாதிக்கப்பட்ட நபர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தெருநாய்களை கட் டுப்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், திருமுருகன்பூண்டி நகராட்சியில் மனு அளித்தும், ஆர்ப்பாட் டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற் போது நாய்கடி பிரச்சனை அதிகரித் துள்ள நிலையில், நாய்க்கடி சிகிச் சைக்கு அரசு மருத்துவமனையில் மருந்து இருப்பு வைக்குமாறு மார்க் சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்துள் ளனர்.