districts

img

கோவை - சீரடி தனியார் ரயில் இயக்குவதா? ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 13 - கோவையில் இருந்து சீரடிக்கு தனி யார் ரயில் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்படுவதை முன்னிட்டு திருப்பூ ரில் திங்கள்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்திய மக்களின் சொத்தான ரயில்வே  துறையை தனியாருக்குத் தாரை வார்க்கும்  முனைப்புடன் தனியார் ரயில் இயக்கம் தொடங்கப்படுவதைக் கண்டித்து கோபா வேசமாக இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் ரயில் நிலைய நுழைவாயில் அருகில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ) கிளைத் தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஆர்இயூ, சிஐடியு, இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந் திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர். முதல் முறையாக செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கோவையில் இருந்து சீர டிக்கு தனியார் ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலில் தற் போது உள்ளதை விட பல மடங்கு கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒன் றிய அரசின் தனியார் ரயில் இயக்கும் முயற்சி படிப்படியாக ரயில்களை தனியா ருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையின் துவக்கம் என்றும், இது ஏழை, எளிய, சாமா னிய மக்களுக்கு எதிரானது, அவர்களது ரயில் பயணத்தை மிகப்பெரும் சுமையாக மாற்றுவதுடன், பலருக்கு இதை எட்டாக்க னியாக மாற்றிவிடும் என்றும் எதிர்ப்புத் தெரி வித்து கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த தனியார் ரயில்  இயக்க முயற்சியைக் கண்டித்து இந்திய  மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  தௌ.சம்சீர் அகமது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ. மணிகண்டன், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் முகமது ஜாபர், சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், டிஆர்இயூ துணைப் பொதுச் செயலாளர் முருகேசன் ஆகியோர் ரயில்வே தனியார் மயத்தின் நோக்கத்தை யும், இதனால் இந்திய மக்களுக்கு ஏற்படக்  கூடிய பாதிப்புகளையும் விளக்கிப் பேசினர். நிறைவாக டிஆர்இயூ திருப்பூர் கிளைச் செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.