திருப்பூர், மார்ச் 1 - பிஏபி பிரதான மற்றும் கிளை கால்வாய் அருகில் உள்ள கிணறு களின் மின் இணைப்புகளைத் துண்டிப்பதை நிறுத்தி வைக்கும் படி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிஏபி பாசனப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு, தாராபுரம், பல்லடம், மடத் துக்குளம், உடுமலை தாலுகாவில் பிஏபி பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களின் அருகில் மிக நீண்ட காலம் முன்பு கிணறு வெட்டி தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும், குறுகிய கால பயிர்கள் என சாகுபடி செய்து வரு கிறோம். கடந்த ஆறு மாத காலமாக எங்கள் கிணறுகளை வருவாய், மின்சாரம், பொதுப்பணி உள் ளிட்ட துறை அதிகாரிகள் அளந் தும், பல கிணறுகள் முறைகேடாக உள்ளன என கூறி மின் இணைப் பைத் துண்டிக்க திருப்பூர் சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள் ளார். இதன்படி மின்வாரிய அதி காரிகள் பலரது கிணறுகளில் உள்ள மின் இணைப்பைத் துண்டிக்க வரு கிறார்கள். ஏற்கெனவே முறையாக அளந்துதான் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது. ஆனால் தற் ்போது முறைகேடாக உள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். நாங்கள் விவ சாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். எங்களை நம்பி பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் உள் ளனர். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் குறைந்த லாபத்தில் பல நேரங்களில் நட்டத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களில் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக் கல் செய்திருக்கிறோம். மேலும், பிஏபி தொடர்பாக பல்வேறு விவ சாய சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அனைத்து வழக்கு களிலும் தீர்ப்பு வரும்போது இப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும். எனவே, திருப்பூர் மாவட்டத் ்தில் பிஏபி வாய்க்கால் கரையோரம் உள்ள கிணறுகளின் மின் இணைப்பை நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை துண்டிக்கக்கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளுக் கும், சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தர விட விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.