districts

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்க தாமதம்: அரசு பேருந்தில் ஒட்டப்பட்ட ஜப்தி நோட்டீஸ்

கும்பகோணம், ஜூலை 19 - சாலை விபத்து வழக்கில் இழப்பீடு  வழங்க தாமதமானதால் கும்பகோணத் தில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதி மன்ற ஊழியர் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே மேல அம்மாச்சத்திரம், சோழன்நகரை சேர்ந்தவர் பெரியாண்ட வர் (57). இவரது மனைவி பழனிச் செல்வி (48). இவர்கள் கடந்த 2016  ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று கும்பகோணத் திலிருந்து செங்கல்பட்டில் உள்ள உற வினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு குடும்பத் தினருடன் சென்றுள்ளனர்.  அப்போது செங்கல்பட்டு புறவழிச் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது, சேலத்தில் இருந்து சென்னை  நோக்கி சென்ற அரசு பேருந்து திடீ ரென கட்டுப்பாட்டை இழந்து பழனிச் செல்வி மீது மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பழனிச் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதையடுத்து அவரது கணவர் பெரி யாண்டவர், சாலை விபத்தில் உயி ரிழந்த பழனிச்செல்வியின் இறப்புக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கக் கோரி கும்பகோணம்  முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2020 செப்டம்பர் 29 ஆம் தேதி பழனிச்செல்வி குடும்பத்துக்கு ரூ.15,87,500 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.  இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முதல் தவணையாக குறிப்பிட்ட தொகையை பழனிச்செல்வியின் குடும்பத் துக்கு வழங்கப்பட்டது.

பின்னர் மீத முள்ள இழப்பீடு தொகையை வழங்க கால தாமதமானதால், கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்த நாளில் இருந்து வட்டி உள்ளிட் டவற்றுடன் கணக்கிட்டு இழப்பீட்டு  தொகையை வழங்கிட பெரியாண்டவர்  கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய் தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி  வெங்கடேச பெருமாள், பெரியாண்ட வருக்கு நிலுவையில் உள்ள இழப் பீட்டை ஜூலை 12 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வழங்கிட உத்தரவிட்டும், தவறி னால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.  இதையடுத்து நிலுவையிலுள்ள இழப்பீடு தொகையை வழங்காத காரணத்தால், திங்கட்கிழமை கும்ப கோணம் புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசு பேருந்தை நீதிமன்ற  உத்தரவுப்படி, வழக்கறிஞர் பாலாஜி மற்றும் முதுநிலை கட்டளை நிறை வேற்றுபவர் (அமீனா) சின்னராசு ஆகி யோர் அரசு பேருந்தை ஜப்தி செய்வ தாக நோட்டீஸ் ஒட்டினர்.  இதனையறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் விரைந்து வந்து வழக்கறிஞரிடம் பெரி யாண்டவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொகையான ரூ.5,47,334-க்கான காசோலையை காண்பித்து வங்கியில் செலுத்துவதாக தெரிவித்தனர்.  இதையடுத்து நீதிமன்ற ஊழியர் ஜப்தி நோட்டீசை அகற்றி நடவடிக்கையை கைவிட்டனர்.