districts

img

பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் ஆட்சியரிடம் மாணவர் சங்கம் முறையீடு

திருப்பூர், ஜூன் 15 - திருப்பூர் மாவட்டத்தில் தனியார்  பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதை சட்டப்படி கட்டுப்படுத்தவும், அரசுப் பள்ளிகளில் விதிமுறைக்குப் புறம்பாக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரியுள்ளது. இந்திய மாணவர் சங்க திருப்பூர் மாவட்டக் குழு சார்பாக மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது, மாவட்டத் துணைச் செயலாளர்கள் கு. பாலமுரளி, ச.மணிகண்டன், துணைத்  தலைவர் கல்கிராஜ், செயற்குழு உறுப் பினர் ஸ்ரீ.ஹரி ஆகியோர் புதன்கி ழமை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்தி டம் மனு அளித்தனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதா வது: இந்த கல்வியாண்டு துவங்கி யிருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்  சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. இதில் தமிழ்நாடு அரசு நிர்ணயித் திருக்கும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண ஒழுங்கமைப்பு குழுவின் கட்ட ணத்தை மட்டுமே தனியார் பள்ளி களில் வசூலிக்க வேண்டும் என்ற நடை முறை இருக்கின்றது. ஆனால்  பல தனியார்  பள்ளிகளில் கூடுத லாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகி றது. அதேபோல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது நன் கொடை என்ற பெயரில் ரூ.2 ஆயிரம்  முதல் 5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகி றது. ஆர்.டி.இ அனைவருக்கும் கல்வி  உரிமை சட்டம் அனைத்து தனியார் பள் ளிகளிலும் முழுமையாக, நேர்மை யான முறையில் அமல்படுத்த வேண்டும். மேலும் பல்லகவுண்டம்பா ளையம் பள்ளியில் காலி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பவும் கோரிக்கை விடப்பட்டது. மாவட்ட ஆட்சியருடன், திருப்பூர்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  அலுவலகத்திலும் மனு வழங்கப்பட் டது.