திருப்பூர், மே 28 - சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க மாநில அரசு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருப் பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை மாநில தலைவர் அ.சு.பவுத் தன், ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் அர. விடுதலைச்செல்வன், திராவிடர் விடுத லைக் கழக மாவட்ட தலைவர் முகில் ராசு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ச. நந்த கோபால் ஆகியோர் சாதி ஆணவப் படு கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியத்தை வலியு றுத்தி உரையாற்றினர். ததீஒமு மாவட்ட துணைச் செயலாளர் சி.கே. கனகராஜ் நன்றி கூறினார்.