districts

அவிநாசி: கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

அவிநாசி, ஜன.16- அவிநாசி அருகே சின்ன ஓலப்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்கப்பட்டார். திருப்பூர் அவிநாசி அருகே உள்ள சின்ன ஓலப்பாளை யத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் சின்னான் (33).  இவர் அதேப்பகுதியில் உள்ள லட்சுமி என்பவருக்கு சொந்த மான தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந் நிலையில், இவர் வியாழனன்று இரவு கால்நடைகளுக்கு உணவளித்து விட்டு வந்தபோது, எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் உள்ள நீரில்லாத 100 அடி ஆழமுள்ள கிணற் றில் தவறி விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு  ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் அவிநாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம் பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் தவறி விழுந்த சின்னானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். இதையடுத்து நீண்ட நேரம் போராடி, வெள்ளி யன்று அதிகாலை உயிருடன் மீட்டனர்.  இதைத்தொடர்ந்து, சின்னான் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;