tamilnadu

img

உயிருடன் புதைத்து விடுவேன்... ஐஏஎஸ் அதிகாரியை மிரட்டிய பாஜக எம்.பி.

ரேவா:
மாநகராட்சி ஆணையராகப் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரியை, உயிருடன் புதைத்து விடுவேன் என்று பாஜக எம்.பி. கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.மத்தியப்பிரதேச மாநிலத்தின், ரேவா மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருப்பவர், ஜனார்த்தன் மிஸ்ரா. இவர், ஞாயிறன்று இரவு, ரேவாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அப்போது, மாநகராட்சி ஆணையர் சஜ்ஜித் யாதவ், சட்டவிரோத குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதாக தனக்குத் தகவல் வந்துள்ளதாகவும், அவ்வாறு மாநகராட்சி ஆணையர் பணம் கேட் கும்போது, தன்னை யாராவது அழைத்தால், உடனடியாக அங்கு வந்து, ஒரு பெரிய குழிதோண்டி, அந்த இடத்திலேயே மாநகராட்சி அதிகாரியை உயிருடன் புதைப்பேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, தான் வருவதற்குத் தாமதமானால், மக்களே அவரை உயிரோடு புதைத்து விடலாம் என்றும், பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ள ஜனார்த்தன மிஸ்ரா, இதற்காக, “ரேவா ஆணையரை உயிருடன் புதைத்த எம்.பி. என்று நாடு என்னை பாராட்டும்” என்றும் பேசியுள்ளார். பாஜக-வின் இந்தகொலைவெறிப் பேச்சு கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

;