மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
திருவாரூர், மே 3 - விவசாயத்திற்கான மும்முனை மின்சா ரத்தை தடையின்றி வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.கலியபெரு மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் தற்போது நெல், வாழை, பருத்தி உள்ளிட்டவை பயிரிடப் பட்டுள்ளன. கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால், பயிர்களுக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. மேலும் மாவட்டத்தில் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படுவதில்லை. கடுமை யான கோடை காலத்தை கணக்கில் கொண்டு, விவசாயத்துக்கான மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து தட்டுப்பாடின்றி 12 மணி நேரமும் வழங்க வேண்டும். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின் மோட்டார்கள் பழுதடைந்து விவசாயி களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே விவசாயத்துக்கு வழங்கும் மும்முனை மின்சாரத்தை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். விவசாயத்தை காக்க உடனடி யாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
களிமேட்டில் அப்பர் சதய விழா தொடக்கம்
தஞ்சாவூர், மே 3- தஞ்சாவூர் அருகே களிமேட்டில் சைவ சமயக் குறவ ரான அப்பர் எனும் திருநாவுக்கரசரின் பிறந்தநாளை கிராம மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருவது வழக்கம். களிமேடு அப்பர் மடத்தில் வெள்ளிக்கிழமை காலை விழா தொடங்கியது. பின்னர் திருமுறை இசையும், 11 மணிக்கு அப்பர் பெருமானுக்கு பல்வேறு திரவியங்க ளால் அபிஷேக திருமஞ்சனமும், 1 மணிக்கு மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் கும்பகோணம் கண்ணன் அடிகளார் தலைமையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில், சென்னை குன்றத்தூர் எம்.கே.பிரபாகரமூர்த்தியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. அதைத் தொ டர்ந்து இரவு 8 மணிக்கு அப்பர் சுவாமி புறப்பாடு நடை பெற்றது. சனிக்கிழமை (மே 4) அன்று மாலை 5 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கு திருமுறை ஒப்புவித்தல் போட்டியும், இரவு 7.30 மணிக்கு அப்பர் பெருமான் வழிபாடும், தஞ்சா வூர் வைதேகி ரவிச்சந்திரன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பட்டிமன்றமும் நடைபெற வுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மே 5) அப்பர் சுவாமிகளுக்கு விடையாற்றி விழாவுடன் சதய விழா நிகழ்வுகள் நிறைவு பெறவுள்ளன.
வேளாண் மாணவர்களின் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு
தஞ்சாவூர், மே 3- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் உள்ள செருவாவிடுதி கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் கிராம வேளாண் அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக செருவாவிடுதி கிராமத்தில் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடைபெற்றது. இதில் வண்ணப்பொடி பயன்படுத்தி சமூக வரைபடம், வளங்கள் தரவரிசை, கல்வி விகிதம், தினசரி செயல் நேரம், பிரச்சனை மரம் போன்றவற்றை புஷ்கரம் வேளாண் அறி வியல் கல்லூரி மாணவர்கள் வரைந்து காட்டினர். இதில், வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், கிராம மக்களுக்கு கிராமப்புற மதிப்பீடு பற்றி விளக்கிக் கூறி னர்.
ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வி துணை இயக்குநர் பனஞ்சேரி அரசுப் பள்ளிக்கு நன்கொடை வழங்கல்
தஞ்சாவூர், மே 3- பேராவூரணி அருகே உள்ள அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு, பணி நிறைவு பெற்ற பள்ளிக்கல்வித் துறை துணை இயக்குநர் ரூ.10,000 நன்கொடை வழங்கி யுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், பனஞ் சேரியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக வீர.சந்திரசேகரன், உதவி ஆசிரி யராக க.அண்ணாராணி ஆகியோர் பணியில் உள்ளனர். பின்தங்கிய கிராமப் பகுதியான இங்கு 46 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி மாணவர்களின் செயல் திறன் குறித்து கேட்ட றிந்த, சென்னையில் வசித்து வரும் பணி நிறைவு பெற்ற பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநர் முனைவர் ஏ.ஆர். சசிகலா, கடந்த மார்ச் 27 அன்று காணொலி வாயிலாக, பனஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம், எண்ணும் எழுத்தும், கற்றல் திறன், காலை உணவுத் திட்டம் குறித்து பேசினார். பின்னர், இயக்குநர் ஏ.ஆர்.சசிகலா பள்ளி வளர்ச்சிக் காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை அனுப்பி வைத் துள்ளார். இதுகுறித்து, பள்ளித் தலைமை ஆசிரியர் வீர. சந்திரசேகரன் கூறுகையில், “பள்ளி குறித்து இணையதளம் வாயிலாக கேள்விப்பட்ட பணி நிறைவு பெற்ற துணை இயக்குநர், எங்களது பள்ளி மாணவர்களுடன் காணொ லிக் காட்சி மூலம் உரையாடினார். மாணவர்களுடன் உரை யாடியதில், அவர்களிடம் பல கேள்விகளை கேட்டு சரியான பதில் அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த அவர், பள்ளி வளர்ச்சிக்காக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோ லையை வழங்கியுள்ளார். இதனை பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற் காக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். கூடுதலாக ரூ.5000 பணம் செலவழித்து, ரூ.15 ஆயிரம் மதிப்பில் தொலைநோக்கி கருவி வாங்கி மாணவர்களின் பயன் பாட்டிற்கு செயல்படுத்த உள்ளோம்” என்றார். இந்தப் பள்ளியில் 13 குழந்தைகளே படித்து வந்த நிலை யில், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க பணி காரணமாக, தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பல்கலை., ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
தஞ்சாவூர், மே 3- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவி யல் புலத்தின்கீழ் இயங்கும், தொழில் மற்றும் நில அறிவியல் துறை, சித்த மருத்துவத் துறை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை ஆகிய மூன்று துறைகளு டன், ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்து வம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கால்நடை மருத்துவம் மற்றும் அறிவில் பல்கலைக்கழகம் இணைந்து வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - தமிழ்ப் பல்கலைக்கழகம் இரு நிறுவனங்களிலும் உள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பயிற்சி கள், குறுகிய படிப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் அல்லது மாநாடுகள் போன்ற கூட்டுக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள் ளுதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் முன்னிலையில், பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் கையொப்பமிட் டார். இதில் ஒரத்தநாடு, அரசு கால்நடை மருத்து வம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புலத்தலை வர் முனைவர் என்.நர்மதா, பேராசிரியர் ரங்க நாதன், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புலத்தலைவர் பேராசிரியர் ரெ.நீலகண்டன், சித்த மருத்துவத் துறைத்தலைவர் பேராசி ரியர் பாரதஜோதி, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத்தலைவர் கு.க. கவிதா, கண்காணிப்பாளர் (பொ) மு.கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்
தஞ்சாவூர், மே 3- வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து பொது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெப்ப அலை யின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் இயற்கை இடர்ப்பாடுகள் தொடர்பாக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட ஒருவ ருக்கு சிகிச்சையளிப்பதற்கான உதவிக் குறிப்புகள்: வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட ஒரு வரை நிழலின் கீழ் குளிர்ந்த இடத்தில் அமர வைத்து, ஈரமான துணியால் துடைக்கவோ அல்லது உடலை அடிக்கடி கழுவிட வேண்டும். சாதாரண வெப்பநிலை தண்ணீரை தலையில் ஊற்றி உடல் வெப்பநிலையை குறைத்திட வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நபர் ORS (Oral Rehydration Solution) எனப்படும் உப்புச் சர்க்கரை கரைசல், எலுமிச்சை சர்பத், சாதநீர் பருகி நீர்ச்சத்து இழப்பிலிருந்து தங்க ளது உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அரு கிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் வெப்பத் தாக்கத்தால் ஏற்படும் பக்கவாதம் மிகவும் ஆபத்தானது. சுற்றுப்புறச்சூழலுக்கு உடலை பழக்கப்படுத்துதல் குளிர் நிலையிலிருந்து வெப்ப அலைக்கு வருபவர்களுக்கு திடீரென ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால், அத்தகைய நபர்கள் தங்களது உடலை வெப்ப அலைக்கு பழகும் வரை ஒரு வாரத்திற்கு திறந்தவெளியில் நட மாடக் கூடாது மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்ப அலைக்கு பழகிய பின்னரே வெளியில் வரவேண்டும் என அறி வுறுத்தப்படுகிறது. நூறுநாள் வேலைத் திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள் ளும் பணியாளர்களுக்கு பணித்தளத்தில் சுகாதாரத்துறை மூலம் ஓஆர்எஸ் பொடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், ஓஆர்எஸ் பொட்ட லங்கள் அருகிலுள்ள அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கும். இது தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.104-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண புதுகை ஆட்சியர் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, மே 3- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும், குடி நீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “கோடைகாலம் நிலவி வரும் இந்த காலக் கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன்மூலம் கேணி கள், ஆழ்குழாய் கிணறுகள், குளங்கள், நீர் இருப்பு பகுதிகள் உள்ளிட்டவற்றில் நீர் குறை வாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் தொடர்புடைய அலுவ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்க ளுக்கு, தொடர்புடைய அலுவலர்கள் உடனடி யாக சீரான குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடி நீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மாற்று ஏற்பாடுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என் றார். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பொறி.பரம சிவன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியா ளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு சென்ற பள்ளி மாணவன் விபத்தில் பலி
விருதுநகர், மே 3- பள்ளி விடுமுறை நாட்களை கணக்கில் கொண்ட இந்து மதவெறியை ஊட்டி வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பி னர், திருநெல்வேலி பகுதியில் பயிற்சி முகாமை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவரது மகன் ஆகாஷ்(16) தாம்பரம்-செங்கோட்டை இரயிலில் பயணம் செய்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவராவார். இவருடன் சேர்ந்து காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொள்ள அதே ரயிலில் பயணம் செய்தனர். அப்போது ஆகாஷ் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரயிலானது விருதுநகர் மற்றும் துலுக்க பட்டி ரயில் நிலையம் இடையே சென்ற போது திடீரென ஆகாஷ் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அந்தபெட்டியில் பயணம் செய்தவர்கள், ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை இழுத்துள்ளனர். இதையடுத்து, சிறிது தூரம் சென்ற ரயில் நடு வழியில் நின்றது. அப்போது அடுத்த பெட்டியில் அதே முகாமில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த திருப்பதி (43), ஆகாஷை அடையாளம் காண்பித்துள்ளார். இதையடுத்து, ஆகாஷின் உடல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழுசுனை மலையடிவாரத்தில் தென்னை மரக்கன்றுகளை நாசப்படுத்திய யானைகள்
யானை கிராமத்திற்குள் புகுந்துவிட வாய்ப்பு : பொதுமக்கள் அச்சம்
கடமலைக்குண்டு, மே 3- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் டாஸ்மாக் கடையின் பின்புறம் ஏழுசுனை மலையடி வாரத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 18ஆம் தேதி ஏழுசுனை மலைப்பகுதியில் இருந்து யானைக் கூட்டம் மலையடிவாரத்தில் உள்ள ராமராஜ் என்பவ ரின் தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகளை சேதப்படுத்தி சென்றது. தகவலறிந்த கண்டமனூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயி ராமராஜ்க்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். கடந்த 10 நாட்களாக யானை கூட்டம் தோட்டப் பகுதிக்கு வரவில்லை. இதனால் யானை கூட்டம் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டதாக விவசாயி கள் நினைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் மலைப்பகுதியில் இருந்து மீண்டும் யானை கூட்டம் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள மல்லையசாமி என்பவரின் தோட்டத்தில் சுமார் 8 ஆண்டுகள் வளர்ந்திருந்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை யானை கூட்டம் சேதப்படுத்தியது. தற்போது யானைகள் சேதப்படுத்திய தோட்டம் தேனி பிரதான சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. எனவே யானை கூட்டம் கடமலைக்குண்டு கிராமத்திற்குள் புகுந்துவிட வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.