districts

img

காங்கேயத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி

திருப்பூர், மே 14- திருப்பூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங் கத்தின் 4ஆவது மாவட்ட மாநாட்டுப் பேரணி காங்கேயத்தில் சனியன்று நடைபெற்றது. காங்கேயம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பிருந்து தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழி யாக வந்தது. இதில் அங்கன்வாடி ஊழி யர்கள், உதவியாளர்கள் பெருந்திர ளாக கலந்து கொண்டனர். சென்னி மலை சாலையில் உள்ள ஸ்ரீ மஹாலில்  பேரணி நிறைவடைந்தது. இம்மாநாட் டில் சிஐடியு தமிழ் மாநிலப் பொருளா ளர் மாலதி சிட்டிபாபு, மாநிலச் செயலா ளர் கே.சி.கோபிகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி. டெய்சி உரையாற்றினார். புதிய நிர்வாகிகள் முன்னதாக, இம்மாநாட்டில் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக டி.சித்ரா, மாவட்டச் செய லாளராக கே.சித்ரா, பொருளாளராக கே.பேபி மற்றும் துணைத் தலைவர் கள், துணைச் செயலாளர்கள், மாநில  செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.