districts

ஜவுளித் தொழிலைக் காக்க இரண்டு நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்குகிறது

திருப்பூர், மே 15 - பின்னலாடை உள்ளிட்ட ஜவுளித் தொழிலை நிலை குலையச் செய்திருக்கும் நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப் பூர் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி தொழில் மையங்களில் இரண்டு நாள் வேலை நிறுத்தம் திங்கள் கிழமை தொடங்குகிறது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஆறு மாத காலத்தில் நூல் விலை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. நவம்பரில் கிலோ ரூ.50 என்ற அளவிலும் அதன் பிறகும் அவ் வப்போது ரூ.20, ரூ.30 என விலை உயர்ந்து வந்தது. மே மாதம் கிலோவுக்கு ரூ.30 விலை உயர்த்தப்பட்டது. இதனால், பின்னலாடை தயாரிப்புக்கு பயன்படுத்தும் நூலின் விலை கிலோ 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் பஞ்சு விலை யும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ.1லட்சத்து 5 ஆயிரம் என்ற அளவுக்கு விற் பனை செய்யப்படுவதாக ஜவு ளித் துறையினர் தெரிவித்தனர். எனவே, வரக்கூடிய காலத்தி லும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து செல்லும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர்கள் கூறு கின்றனர். நூல் விலை உயர்வினால் பொதுவாக ஜவுளி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டாலும், குறிப்பாக, சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதியாளர்கள் அதன் சார்பு தொழில் துறையினர் கடும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை உள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எனவே, ஜவுளித் தொழி லைப் பாதுகாக்க ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவுளித் தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். திருப் பூரில் கடந்த வாரம் மேற்கு மண் டலத்தைச் சேர்ந்த பி.ஆர்.நட ராஜன், கே.சுப்பராயன், எஸ். சண்முகசுந்தரம், ஏ.கணேச மூர்த்தி, ஜோதிமணி ஆகிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற அனைத்து தொழில் அமைப்பினர் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடத்தப்பட் டது.

இந்த கூட்டத்தில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடன டியாக ஒன்றிய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். குறிப் பாக பருத்தி மற்றும் நூல் ஏற்று மதியை தடை செய்ய வேண் டும். உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் பருத்தியைச் சேர்க்க வேண்டும், பங்கு சந்தை ஊக வணிக பட்டியலில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும், மே மாதம் உயர்த்திய கிலோ ரூ.40 உயர்வை நூற்பாலைகள் ரத்து  செய்ய வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மே 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று  தீர்மானித்தனர். அத்துடன் இந்த போராட் ்டத்தில் அனைத்து ஜவுளித் தொழில் துறையினரும் பங்கேற்க வும் அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதி களிலிருந்து ஜவுளி தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ள னர். எனவே, இரு நாட்கள் பின்ன லாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் உள்பட ஜவுளித் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், ஜவுளித் துறையினர் போராட்டத்தை ஆதரித்தும், அவர் களது கோரிக்கையை வலியுறுத்தி யும், தமிழகத்தில் ஜவுளித் தொழி லுக்குத் தேவையான பஞ்சு தடை யின்றி சீராக கிடைப்பதற்காக, தமி ழக பருத்திக் கழகம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாநகராட்சி முன்பாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட் டம் நடத்துவதாகவும் அறிவித்துள் ளது.