திருப்பூர், ஜூலை 15- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் 50ஆம் ஆண்டு பொன்வி ழாவை முன்னிட்டு திருப்பூரில் ஞாயிறன்று கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா கடந்த சனியன்று தொடங்கியது. அவிநாசி சாலை குமார் நகர் தமுஎகச வடக்கு கிளைச் செயலாளர் த.காளிதாஸ் தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடக்கு கிளை துணைச் செயலாளர் பொன்.பாலகு மாரன் வரவேற்றார். வடக்கு கிளைத் தலை வர் த.நாகராசன், பொருளாளர் மு.திருப்பதி, கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜெய லட்சுமி, டிஎம்எல்.ஆறுமுகம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப் பினர்கள் இரா.ஈஸ்வரன், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இதில், நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பார்வை என்கிற தலைப்பில் ஊடகவியலா ளர் இந்திரகுமார் தேரடி விளக்கிப் பேசினார். முற்போக்கு தடத்தில் முன்னேறும் பதாகை என்ற தலைப்பில் தமுஎகச மாநிலத் துணைச் செயலாளர் அ.கரீம் பேசினார்.
முன்னதாக பரதநாட்டியம், கவிதை வாசித்தல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இதைதொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண் டாம் இடம் பிடித்த 15வேலம்பாளையம் மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி அபர்ணா ஸ்ரீ, தேசிய அளவிலான தட களப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற 15வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மெகா எபிபனி ஆகியோ ருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் தமுஎகச வடக்கு துணைச்செயலாளர் அ. சந்தோஷ் நன்றி கூறினார்.