districts

img

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்து  

திருப்பத்தூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் மீது வேன் மோதிய விபத்தில் சித்தார்த் என்பவர் உயிரிழந்தார்.  

திருப்பத்தூர் மாவட்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சித்தார்த்(வயது 56) அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஜோலார்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஜெயசீலனும்(56) மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் துய நெஞ்சக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சுற்றுலா வேன் மோட்டார்சைக்கிளின் பின்பக்கமாக வேகமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்களில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சித்தார்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயப்பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைதொடர்ந்து இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.