திருப்பத்தூர், மார்ச் 5- திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 23 மாணவர்கள் உக்ரைன் நாட்டில் இருந்தனர். இதில் வாணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள், ஆம்பூர் வட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், திருப்பத்தூர் வட்டத்தை சேர்ந்த 3 மாணவர்கள் என மொத் தம் 7 மாணவர்கள் தங்கள் வந்து சேர்ந்துள்ளனர். தற்போது தில்லியில் 3 மாணர் களும், மும்பையில் ஒருவரும் உள்ளனர். உக்ரைன் நாட்டில் இருந்து மாணவர்கள் மீட்கப் பட்டு ருமேனியாவில் 4 மாணவர்களும், ஸ்லொவேக் கியா நாட்டில் 3 மாணவர்களும், ஹங்கேரி நாட்டில் 3 மாணவர் களும் உள்ளனர். இரண்டு மாணவர்கள் மட்டும் உக்ரைன் நாட்டில் சுமி மாநிலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடு களை ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து மேற்கொண் டுள்ளன.உக்ரைன் அருகில் உள்ள வேறு நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து மாணவர்களையும் விமானம் மூலம் இந்தியா கொண்டு வருவ தற்கான ஏற்பாடுகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஆட்சியர் கூறியுள்ளார்.