districts

திருப்பத்தூர்: 6 போலி மருத்துவர்கள் கைது

திருப்பத்தூர், ஜூன் 8- திருப்பத்தூர் மாவட் டத்தில் பல்வேறு இடங்க ளில் மருத்துவம் படிக்கா மல் சிலர் கிளீனிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்து வம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து அரசு மருத்துவ அலு வலர்கள், காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் 12 பேர் கொண்ட குழுவை அமைக்கப்பட்டு திருப்பத்  துர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் நாட்றாம்பள்ளி பகுதி களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் திருப்பத்தூரை அடுத்த அங்கநாதவலசை கிரா மத்தைச் சேர்ந்த பழனி (51) அதேபகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக கிளீ னிக் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பழனியை கைது செய்து அவரது கிளீனிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் மருத்து வம் படிக்காமல் கடந்த 7 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த வேலன் (49) என்பவரையும் கைது செய்து, அவரது கிளீனிக்கில் இருந்த மருந்து, மாத்திரை உள்ளிட்டவைகளை பறிமு தல் செய்தனர். ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆம்பூர் அரசு மருத்துவமனை துணை மருத்துவ அலுவலர் நதியா தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தியதில், மாச்சம் பட்டு கோவிந்தசாமி (47), கடாம்பூர் ஜெயபால் (69) ஆகிய இருவரும் மருத்து வம் படிக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் 2 பேரையும் கைது செய்து, அவர்களது கிளீனிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை பறிமுதல் செய்தனர். வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப் பட்ட சோதனையில், சங்கரா புரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் (47) மருத்து வம் படிக்காமல் கடந்த 7 ஆண்டுகளாக கிளீ னிக் நடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல் துறையி னர் அங்கிருந்த மருந்து களை பறிமுதல் செய்த னர். அதேபோல் ஜோலார் பேட்டையைச் சேர்ந்த கணேஷ் (30) என்பவரும் மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்த்து வந்தது தெரிய வந்தது. அவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரது கிளீனிக் கிற்கு ‘சீல்’ வைத்தனர்.