திருப்பத்தூர், நவ. 25- பழங்குடியின மக்கள் பாதிக்காத வகையில் தாவரவியல் பூங்காவை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை நிலாவூர், காரப்பாறை வட்டம் ஆகிய கிராமங்களில் பல தலைமுறைகளாக வாழும் மலை யாளி பழங்குடி மக்களின் வீடு, அனுபவ நிலங்களை அபகரிக்கும் வகை யில் தாவரவியல் பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தாவரவியல் பூங்காவை வேறு இடத்தில் அமைக்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு தலைமையில், திருப்பத்தூர் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தாவரவியல் பூங்கா அமைத்து பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பழங்குடி மக்களை பாதிக்காத வகையில் அரசு தரிசு நிலங்களில் இந்த திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். பழங்குடி மக்கள் வாழும் வீடுகளுக்கும், அனுபவ நிலங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதில் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், ஜவ்வாது மலை தலை வர் ஜெயராமன், ஏலகிரி மலை தலை வர் மனோகரன் நிலாவூர் காரப்பாறை வட்டம் கிளைத் தலைவர் காளி யசோதா, செயலாளர் அம்சி நாகம்மாள், கீர்த்தனா, இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.