districts

img

சாதிய ஆணவ படுகொலையை தடுக்க தனிச் சட்டம் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மே 29- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாதிய ஆணவ படுகொலையை தடுக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்றக் கோரி திரு நெல்வேலியில்  நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் துரை நாராயணன் தலைமை வகித்தார்.   திராவிடர் தமிழர் கட்சி மாநில பொ துச்செயலாளர் மு.கதிரவன் ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப் பாட்டத்தில், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் க.தமிழரசு, ஆதித்தமி ழர் கட்சி மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி, தமிழர் உரிமை மீட்புக்களம் கே. லெனின் கென்னடி, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்துவளவன், இலக்கியவாதி முருகன் கண்ணா, சிஐடியூ மாவட்ட இணைச் செயலர் சரவண பெருமாள் ஆகியோர்  பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்து வைத்தார், ஆர்ப்பாட்டத்தில் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;