திருநெல்வேலி,நவ.25- திருநெல்வேலியை அடுத்துள்ள அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ் (63). கட்டுமான தொழி லதிபர். இவர் கடந்த 22-ஆம் தேதி தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் திருநெல்வேலி நகருக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் செய்தனர். இந்த நிலையில் பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள குளத்தங்கரையில் வெள்ளிகிழமை ஜேக்கப் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது இரண்டு கால்க ளும், ஒரு கையும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே ஜேக்கப் ஆனந்தராஜின் குடும்பத்தி னரை ஒரு கும்பல் கடந்த இரண்டு நாட்களாக தொலைபேசி யில் தொடர்பு கொண்டு ஜேக்கப் ஆனந்தராஜை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தரவேண்டும் என கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஜேக்கப் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில், அவரது கால்கள் மற்றும் கையை நாய்கள் கடித்து குதறி இருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.