districts

img

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

பாபநாசம், டிச.26- பாபநாசம் ரோட்டரி சங் கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து பத்தாம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.  போட்டிக்கு பாபநாசம்  ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் செந்தில்குமரன் பழனிவேல், இணை செயலா ளர் பண்டாரவாடை நவநீத கிருஷ்ணன் ஆகியோர் முன்  னிலை வகித்தனர். துணைத் தலைவர் சிவ.இ.சரவணன் வரவேற்றார். முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் தரும.சிலம் பரசன் நன்றி கூறினார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற 80 பேர் களுக்கு தஞ்சை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் கலந்துக் கொண்டு கோப்பை, சான்றிதழ், ரொக்க பரி சினை வழங்கினார்.  பாபநாசம் அரசு வழக்கறி ஞர் தர்ம. வெற்றிச்செல்வன், கவித்தலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி குணசேக ரன், சதுரங்க கழக துணைத் தலைவர்கள் செந்தில் நாதன், சீனிவாசன், சிவராஜ், ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.