districts

மேம்பால தடுப்புச் சுவரில்  கார் மோதி ஒருவர் பலி

திருநெல்வேலி, ஏப்.8 - தூத்துக்குடி பிரேம்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). டிரா வல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வியாழக்கிழமை தனது நண்பர் களுடன் காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றார். வெள்ளிக்கிழமை காலை அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து ஊர் திரும்பினர். கார் நெல்லை  ரெட்டியார்பட்டி மேம்பாலம் பகுதியில் வந்த போது திடீரென காரின் பின்பக்க  டயர் வெடித்தது. இதனால் கார் தாறுமாறாக ஓடி மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. பின்னர் மோதிய வேகத்தில் கார் 2 முறை ‘பல்டி’ அடித்ததாக கூறப் படுகிறது.  அப்போது காரில் டிரைவர் சீட்டுக்கு பின்புறம் அமர்ந்துள்ள ராஜ்குமார் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.அவரை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.  இந்த விபத்தில் அவரது நண்பர் ஒருவரும் காயம் அடைந்தார். அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவலறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அன்ன லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.