districts

img

மேயர் ராஜினாமா ஜூலை 8 நெல்லை மாநகராட்சி சிறப்புக் கூட்டம்

திருநெல்வேலி, ஜூலை 4- நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் ராஜினாமா செய்துள்ள நிலையில், வருகிற 8ம் தேதி நெல்லை மாநகராட்சி சிறப்பு கூட்டம் நடத்தப் படும் என மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் அறிவித்துள்ளார். நெல்லை மாநகராட்சி 55 வார்டு களை உள்ளடக்கியது. இதில் 43 வார்டு களில் திமுகவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், சுயேச்சை தலா ஒரு வார் டிலும் வெற்றி  பெற்றது.

சுயேச்சை கவுன்சிலர் திமுக வில் இணைந்ததால் திமுகவின் பலம் 44  ஆக உயர்ந்தது. இதன் மூலம் திமுக கூட்டணி நெல்லை மாநகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 4 வார்டு களில் மட்டும் வெற்றி பெற்றது. 16ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுக  கவுன்சிலர் பி.எம். சரவணன் நெல்லை மாநகராட்சி மேயராகவும், 1ஆவது வார்டில் வெற்றி பெற்ற கே.ஆர்.ராஜூ  துணை மேயராகவும் தேர்வு செய்யப் பட்டனர். இந்நிலையில் மேயர் பி.எம். சரவணன் தனது மேயர் பதவியை புதன்கிழமை மாலை ராஜினாமா செய் தார். அவரது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவுக்கு அனுப்பினார்.  

இதுதொடர்பாக நெல்லை மாநக ராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் வியாழக்கிழமை வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தமிழ்நாடு நகர்ப் புற  உள்ளாட்சி அமைப்புகள்-சட்டம் 1998 பிரிவு 34ன் படி மேயர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார்.

இந்த பதவி விலகல் கடிதம் குறித்து மாமன்றத்தின் பார்வைக்கும், பதி விற்கும் வைப்பது தொடர்பான சிறப்பு கூட்டம் வருகிற 8ஆம் தேதி திங்கள்கிழ மை காலை 10:30 மணிக்கு நெல்லை மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்டப மாமன்ற கூட்ட அரங்கில் நடக்கிறது.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.