சிபிஎம் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்க! சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியருக்கு முழு பாதுகாப்பு வழங்குக!
திருநெல்வேலி, ஜூன் 16 - நெல்லையில் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தின் மீதான தாக்குதலை கண்டித்து திங்கட்கிழமை (இன்று) மாலை 4.30 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நெல்லை ரெட்டியார்பட்டி சிபிஎம் அலுவல கத்தில் கடந்த 13ம் தேதி சாதி மறுப்பு திரு மணம் நடைபெற்றது.
இந்நிலையில் 14ஆம் தேதி மாலை சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணின் உறவினர்கள், அடியாட்களை அழைத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து தோழர்களை தாக்கியும் அலுவலக கண்ணாடிகளை உடைத்தும் பொருட்களை நொறுக்கியும் வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
இவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்; போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள லூர்து நாதன் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்துக் கட்சிகள், முற்போக்கு அமைப்பு கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், பி.கற்பகம், மாவட்டச் செய லாளர் க.ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.