districts

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை: 2 பேர் கைது

திருநெல்வேலி, ஜன.1- நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆட்டுதட்டை தெருவை சேர்ந்தவர் முருகன்( 28). இவரது மனைவி முத்துலெட்சுமி(25). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காத லித்து திருமணம் செய்து கொண்டனர். இவர் களுக்கு 2 வயதில் ஒரு மகளும், 9 மாதத்தில் மகனும் உள்ளனர். தற்போது முத்துலெட்சுமி கர்ப்பிணியாக உள்ளார். முருகன் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடத்தில் தங்கியிருந்து கையுறை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் முத்துலெட்சுமி தனது சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை சிவானந்தா காலனி காந்தி நகரில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் புத்தாண்டை கொண்டா டும்விதமாக சொந்த ஊருக்கு வந்த முருகன் சனிக்கிழமை இரவில் கடையில் கேக் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவர் தனது  மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்து  சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அங்கு அதே பகுதியில் வசிக்கும் முருகனின் உறவின ரான மணிராஜ் என்பவரது மகன் ரவிச்சந்தி ரன், தனது தந்தை அழைப்பதாக கூறி முரு கனை அழைத்து சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு நேரமாகியும் முருகன் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த முத்து லெட்சுமி தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு மணிராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஆடு கட்டும் தொழுவத்தில் பலத்த  வெட்டுக்காயங்களுடன் முருகன் இறந்து கிடந்தார். அவரது மண்டை ஓடு சிதைந்து மூளை வெளியே வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதனை பார்த்து முத்துலெட்சுமி அலறித் துடித்தார்.  தகவல் அறிந்து அங்கு வந்த பத்த மடை போலீசார், முருகன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துணை ஆய்வாளர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகின. நாகர்கோவிலில் இருந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முருகன் சொந்த ஊருக்கு வந்துவிடுவார். அப்போது உறவின ரான மணிராஜ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மணிராஜின் மகளி டம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை சிலர் தவறாக பேசி உள்ளனர். இதனால் இனி வீட்டுக்கு வரவேண்டாம் என்று முருகனை, மணிராஜ் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்து  வந்த மணிராஜ் மற்றும் அவரது மகன் ரவிச்சந்திரன் ஆகியோர் முருகனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி சனிக்  கிழமை இரவு முருகனை தங்களது வீட்டுக்கு  அழைத்து வந்துள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், மணிராஜ் மற்றும் அவரது உறவினரான அதே  பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக முருகனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது. கொலை தொடர்பாக மணிராஜ், அவரது மகன் ரவிச் சந்திரன் மற்றும் உறவினர் முத்துராஜ் ஆகி யோரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலை யில் ஞாயிற்றுக்கிழமை காலை மணிராஜ் மற்றும் அவரது உறவினர் முத்துராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.