districts

முஸ்லீம் மாணவர்களை மிரட்டிய சங் பரிவார் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாபநாசம், செப்.18 - முஸ்லீம் மாண வர்களை மிரட்டிய சங் பரி வார் அமைப்பினர் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாப நாசம் சட்டமன்ற உறுப்பின ருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிலவி வரும் அமைதியை சீர்கு லைக்கும் நோக்கோடு சில சங் பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை சிறு பான்மையினர் மீது நடத்தப் பட்ட தாக்குதல்கள் இதை தெளிவுபடுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாண வர்கள் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு பள்ளிக்கு திரும்பும் வழியில், மாண வர்களை வழிமறித்து உத்தம பாளையம் இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் வேல் சிவக்குமார், இந்து இளை ஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா மற்றும் வீர சிவாஜி,  வசந்த் உள்ளிட்ட சங் பரி வார் அமைப்பினர் மிரட்டி யுள்ளனர். தொழுகைக்குச் சென்று வந்த முஸ்லிம் மாணவர்கள் யாரும் பள்ளிக்கூடத்திற்கு செல்லக்கூடாது என்று  மிரட்டியதோடு மட்டுமல்லா மல். அவர்களை தொழு கைக்கு அனுப்பிய பள்ளி ஆசிரியர்களையும் மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி யுள்ளனர். இதுகுறித்து காவல் துறையில் புகார் தெரி வித்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனர்.

சங் பரிவார் அமைப்பினரின் இதுபோன்ற நடவடிக் கையை கண்டித்தும் அவர் கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக் கோரியும் முஸ்லிம் கள் போராடியபோது அவர் களைக் கைது செய்து பிறகு விடுவித்துள்ளது காவல்துறை. அதேபோல், சென்னை அசோக் நகர் காவல் எல் லைக்கு உட்பட்ட, ரங்கராஜ புரத்தில் உள்ள அரபி பாட சாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவனை 40  வயதுள்ள மர்ம நபர் ஒருவர்  தாக்கி, முஸ்லிம்கள் பயன் படுத்தும் தொப்பியை பற்றி தரக்குறைவாகப் பேசிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த  சம்பவத்திலும் யாரும் இதுவரை கைது செய்யப்பட வில்லை. வெள்ளியன்று ஒரே நாளில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட இந்த  தாக்குதல்களை தனித்தனி  சம்பவங்களாக அணுகா மல், தமிழகத்தில் திமுக  ஆட்சியில் உள்ள அமை தியையும், மதநல்லிணக்கத் தையும் சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு நடை பெறும் சம்பவங்கள் என்ற கண்ணோட்டத்தோடு தமிழக காவல்துறை அணுக  வேண்டும்.  எனவே தமிழ்நாடு முதல மைச்சர் சிறுபான்மையின முஸ்லிம்களை மிரட்டியவர் கள் மீது தாக்குதல் நடத்தி யவர்களையும், இதற்கு  மூளையாக செயல்படுவர் களையும் உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;