பாபநாசம், டிச.19- மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பி னருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை யில், “தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 12 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களில் 403 கஞ்சா வியாபாரி கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமி ருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை பாராட்டு கிறேன். அனைத்து மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணை யர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை யில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோத மாக அவர்கள் வாங்கிக் குவித்த சொத்து களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதி காரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி வர வேற்கத்தக்கது. தமிழக மாணவர்கள் மற்றும் இளை ஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் இனிமேல் கஞ்சா இருக்காது என்கிற நிலையை உருவாக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் போதைப் பொருட் களை தடுப்பதற்கு தீவிர முன்னெடுப்பு களை தமிழக காவல்துறை அதிக விழிப்பு டன் செய்ய வேண்டும். காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவின், பெரு முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி யின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.