திருநெல்வேலி, ஏப்.7- செல்போனில் தொடர்ச்சி யாக ‘ஆன்லைன் கேம்’ விளை யாடியதால் பள்ளி மாணவ ருக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர் பாக வீடியோ சமூக வலைதளங் களில் வேகமாக பரவி வரு கிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியது. தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவிய கொரோ னா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுக ளாக பள்ளி, கல்லூரிகள் முற்றிலுமாக மூடப்பட்டது. தொற்று பரவலை கட்டுப் படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிக ளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.இதனை காரணம் காட்டி பெரும்பாலான மாணவ- மாணவிகள் அதிக நேரம் செல்போன் உபயோகித்து வரு கின்றனர். அப்போது பப்ஜி, ப்ரீ பயர் உள்ளிட்ட விளை யாட்டுகளை டவுன்லோடு செய்து 24 மணி நேர மும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வருகின்றனர். இதுபோன்ற விளையாட்டு களால் பெரும்பாலான சிறு வர்களின் மனநிலை பாதிக் கப்படுவதாக கூறப்பட்டது. அதிக நேரம் செல்போனில் ஒரே விளையாட்டை விளையாடி தூக்கத்திலும் அவர்கள் அது போன்ற செய்கைகளையே செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுபோன்று விளையாட்டுக்கு அடிமையாகி ஏராளமான பள்ளி குழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அதில் ஒருவர் தான் நெல்லை மாவட் டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன். கடந்த 4 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அந்த மாண வன் நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு மயங்கிய நிலையில் கொண்டு வரப் பட்டான். அவன் கைகளை துப்பாக்கியால் சுடுவது போன் றும், தாக்குவது போன்றும் செய்கைகள் காண்பித்தபடி மயக்க நிலையில் அழைத்து வரப்பட்டான். உடனே அவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக அங்குள் ளவர்கள் அவரது பெற்றோரி டம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அளித்த பதில் மிகவும் அதிர்ச்சியடைய செய் தது. ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் அவனுக்கு செல் போன் வாங்கி கொடுத்துள்ள னர்.தொடக்கத்தில் சிறிது நேரம் பொழுது போக்குவ தற்காக பப்ஜி விளையாட்டு விளையாடிய மாணவன் அதன் பின்னர் நள்ளிரவு வரையிலும் அதே விளை யாட்டை விளையாடி வந்துள் ளான். அதன் காரணமாக ஏற்பட்ட விபரீதத்தால் அந்த விளையாட்டிற்கு அடிமையா கிய மாணவன் மயக்கம் அடைந்து விட்டான்.அதனை தொடர்ந்து அவன் மயக்க நிலையிலும் பல்வேறு செய்கைகள் காண்பித்துள் ளான் என்றும், அதன் காரண மாகவே அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்த தாக அவர்கள் தெரிவித்தனர்.