திருநெல்வேலி, ஜூன் 20- நெல்லை வழக்கறிஞர் கு. பழனி மீது தாக்குதல்,நடத்தியவர்களைக் கண்டித்தும் வழக்கறிஞர் பழனி மீது அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வியாழக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் கு.பழனி மீது தாக்குதல் நடத்திய கும்பல் அனை வரையும் கைது செய்ய வேண்டும்.
சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்ட வழக்கறிஞர் பழனி மீது அவதூறாக வீடியோ வெளி யிட்டு அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வரும் கய வர்களின் நடவடிக்கையை உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடரும் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க, தமிழக அரசு வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் - அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் - சமூக நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் ஆகியவை சார்பாக ஜூன் 20இல் காலை திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத் திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்க மாநில அமைப்பாளர் ஜி.ரமேஷ் தலைமை தாங்கினார். நெல்லை வழக்கறிஞர் சங்க முன்னாள் செய லாளர் ப.செந்தில்குமார், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் முருகன், மூத்த வழக்கறிஞர்கள் முபாரக்அலி, சிவசங்கரன், ஜாகீர் ஹுசைன், ரமேஷ்பாபு, நெல்லை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் பாரதி முருகன், வழக்கறிஞர்கள் பி.எம்.முருகன், ஆரிப் பாட்சா, அப்துல் நிஜாம், தங்கப்பாண்டி, முகம்மது நைனார், தவ்ஹீத் எம்.சி. கார்த்திக் ஜெபசிங், பாசறை பரமசிவன், முகமது ஹனிபா, சரவணகுமார், மணிமாலா, குணவதி, ஆறுமுக வடிவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.