districts

கல்லூரிகளுக்கு இடையிலான  கலை, அறிவியல் போட்டி

 பாபநாசம், மே 22-  பாபநாசம் ஆர்டிபி கலை, அறிவியல் கல்லூரி மேலாண்மையியல் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான கலை, அறிவியல் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.  மேலாண்மையியல் துறைத் தலைவர் சசிக் குமார் வரவேற்றார். கல்வி நிறுவனத்தின் தலைவர் தாவூத் பாட்சா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராபியா பேகம் பேசினார். டாக்டர் சரவணவேல் கலந்துக் கொண்டார்.  தஞ்சாவூர், கும்பகோணத்தைச் சேர்ந்த 13 கல்லூரிகளிலிருந்து 450 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நடிகர் குரைஷி பங்கேற்று போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஒட்டு மொத்த கோப்பையை திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் பெற்றனர்.