districts

அனவன் குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

திருநெல்வேலி, ஜூன் 13- நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்குள் அடிக்கடி மலைப் பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் புகுந்து ஆடு, நாய் உள்ளிட்டவற்றை கடித்து சாப்பிட்டுச் செல்வது வாடிக்கையாக உள்ளது.

சமீபத்தில் அனவன் குடியிருப்பு, வி.கே.புரத்தில் இருந்து தனியார் மில் வழியாக செல்லும் சாலையில் உள்ள கிராமப்புறங்களுக்குள், சிறுத்தை ஒன்று புகுந்து ஆடுகளை கடித்து  கொன்றது. இதனால் வனத்துறை யினர் அந்தப் பகுதிகளில் கூண்டு வைத்த தில் 3 சிறுத்தைகள் பிடிபட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறை யினர் முகாமிட்டு இருந்ததால், அதன்பின் சிறுத்தை நடமாட்டம் இல்லா மல் இருந்தது. மக்களும் நிம்மதியாக இருந்தனர்.

 இந்நிலையில் ஜூன் 10 அன்று இரவு அனவன் குடியிருப்பு கிராமத்திற்குள் சிறுத்தை நடமாடியதாக அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தெரி வித்தனர். இதனால், அம்பை கோட்ட  துணை இயக்குநர் இளையராஜா உத்தரவின் பேரில், பாபநாசம் வனச்ச ரகர் சத்தியவேல் தலைமையில் வனத்துறை குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

மேலும் கடந்த 2 நாட்களாக சுமார் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு முகாமிட்டு இரவு, பகலாக மோப்ப நாயின் உதவியுடன் சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அனவன் குடி யிருப்பு பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிந்து இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து புதன்கிழமை இர வோடு இரவாக அனவன் குடியிருப்பு அருகே, மேல் ஊத்து காட்டுப் பகுதி யில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைத்து, தொடர்ந்து வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.