districts

தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி நெல்லை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருநெல்வேலி, செப்.25- கோவையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாஜக பிரமுகர்கள் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக முக்கிய நகரங்களில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக  நெல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக நெல்லை ரயில் நிலையத்தில் பயணி களின் உடமைகள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படு கிறது. ரயில்வே காவல்துறையினர், ரயில் நிலை யத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளை யும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுப்புகிறார்கள். மேலும் ரயில் நிலை யத்திற்கு வரும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகிறது.  இதுதவிர நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன், பாளை உள்ளிட்ட மாநகரின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

;