districts

வீடு புகுந்து 6 மாத பெண் குழந்தை கடத்தல் : 2 பெண்கள் கைது

திருநெல்வேலி, ஜூன் 22- நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழ பாப்பாக்குடி காட்டு நாயக்கன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). இவரது மனைவி இசக்கியம்மாள்(20). இவர்க ளுக்கு பிரியங்கா என்ற 6 மாத பெண்  குழந்தை உள்ளது. கார்த்திக் கேரளா வில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் குழந்தையை பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு அவர் வந்திருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு கார்த்திக் வீட்டில் தனது மனைவி மற்றும்  குழந்தையுடன் தூங்கி கொண்டி ருந்தார். நள்ளிரவில் கார்த்திக் எழுந்து பார்த்தபோது அவர்களது குழந்தையை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.  இதையடுத்து அவர்கள் பாப்பாக் குடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து மாயமான குழந்தையை தேடி வந்தார். மேலும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மேற்பார்வையில் தனிப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அதில் அதே பகு தியை சேர்ந்த 2 பெண்கள் குழந்தை யை கடத்தியது தெரியவந்தது.  இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்கள் வரு மாறு:- கார்த்திக் வசிக்கும் அதே காட்டு நாயக்கன் தெருவில் வசித்து வருபவர் கனி(40). இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த செல்வி (35) என்பவரும் உறவினர்கள். இவர்க ளிடம் ஆலங்குளம் பரும்பு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுரையில் உள்ள தனது உறவினருக்கு குழந்தை வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் அதற்காக பணம் தருவதா கவும், யாரிடமாவது இருந்து ஒரு குழந்தையை கடத்தி வந்து தருமாறும் கேட்டுள்ளார். உடனே கனி, செல்வி ஆகியோர் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த வாலிபரிடம் சம்மதம் தெரி வித்துள்ளனர். சம்பவத்தன்று 2 பேரும் கார்த்திக் குழந்தையை நைசாக கடத்தி சென்றுள்ளனர்.  முன்னதாக ஆலங்குளத்தை சேர்ந்த வாலிபரை அந்த பகுதிக்கு வரச் சொல்லி இருந்தனர். குழந்தையை எடுத்து சென்று காட்டுப்பகுதியில் நின்ற வாலிபரிடம் கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பிவிட்டனர். அந்த வாலிபர் மதுரையில் உள்ள தனது உறவினரிடம் குழந்தையை ஒப்படைத்தது விசார ணையில் தெரியவந்தது.  இதையடுத்து மதுரை சென்ற போலீசார் அங்கிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு பாப்பாக்குடிக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.