districts

img

‘எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பது தேசியமயத்தின் நோக்கங்களை தோற்கடிக்கும் செயல்’

திருச்சிராப்பள்ளி, ஜன.20- பிப்ரவரி 23, 24 ஆகிய தேதி களில் பல்வேறு தொழிற்சங்கங் கள்  சார்பில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் எல்ஐசி ஊழியர் கள் பங்கு பெறுவதாக காப்பீட் டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  1956-ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி ஆயுள் காப்பீட்டுத் துறை நாட்டுடைமை ஆக்கப் பட்டது. ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி இன்று ரூ.38, கோடியே 4, 610 கோடி மதிப்புள்ள சொத்துகளோடு, ரூ.34 லட்சத்து 36, 686 கோடி ஆயுள் நிதியோடு, 14 நாடுகளில் கிளைகளை கொண்டு செயல் பட்டு வருகிறது.  எந்த காப்பீட்டு நிறுவனத்தி டமும் இல்லாத வகையில் 40 கோடி பாலிசிதாரர்களுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி க்கு எல்ஐசி அடிப்படையாக விளங்குகிறது. தேசத்தின் வளர்ச் சிக்கும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 18 சதவீதமாக உயர்வதற்கும் எல்ஐசி முக்கிய பங்கு வகிக்கிறது.  மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எல்ஐசியின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்து ஒரு லட்சம் கோடி திரட்ட ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.  எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு களை விற்பது தேசியமயத்தின் நோக்கங்களை தோற்கடிக்கும் செயலாகும். பொருளாதார அறி ஞர்கள், அரசியல் கட்சித் தலை வர்கள், வெகுஜன அமைப்புக ளின் தலைவர்கள் என பல தரப்பி னரும் எதிர்க்கும் இந்த பங்கு விற்பனையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.  இவ்வளவு எதிர்ப்பையும் மீறி அரசு எல்.ஐ.சி பங்குகளை விற்ப தற்கு முயன்றால் என்றைக்கு எல்ஐசி பங்கு சந்தையில் பட்டியலிடப்படுகின்றனதோ அன்று எல்ஐசியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம். மேலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடத்தும் வேலை நிறுத்தத்தில் எல்ஐசி ஊழியர்கள் பங்கு பெறுவோம் என்றார்.