வெம்பக்கோட்டை, ஜன.23- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டையில் உள்ள வைப்பாற்றுப் படுகையில் மேட்டுக்காட்டுப் பகுதியில் தொல்லியல் அக ழாய்வு பணிகள் நடைபெற வுள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன. தமிழ்நாட்டில் பழங்கா லப் பொருட்கள் கிடைத்து வரும் 7 இடங்களில் தொல்லி யல் அகழாய்வு நடைபெறும் என சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதல்கட்ட அக ழாய்வு பணியானது, வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்றுப் படு கைப் பகுதியில் நடைபெற வுள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் வெம்பக்கோட்டை உள்ளது. இந்த ஊரானது வைப்பாற் றின் இடது கரையில் அமைந் துள்ளது. இது கண்டி, சேதுபதி, பாண்டி சேதுபதி ஆகிய குறு நில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியாக கூறப்படுகிறது. மேலும் பழமைவாய்ந்த 8 கோணத்தில் உள்ள சந்தியா மண்டபம் மற்றும் வற்றாத நாழிக்கிணறும் உள்ளது.
இதேபோல் 500 ஆண்டு களுக்கு முன்பு கட்டப் பட்ட மீனாட்சி சுந்தரேசு வரர் கோவில் மற்றும் பழங் கால மண்டபங்கள் நினைவுச் சின்னங்களாக வைப்பாற் றின் கரையில் உள்ளன. மேலும், இந்தப் பகுதி யில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக கண்டெடுக்கப் பட்டு பாதுகாக்கப்பட்டு வரு கின்றன. மேட்டுக் காடு என்றும் உச்சிமேடு என்றும் அழைக் கப்படுகின்ற 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்ற தொல்லியல் மேட்டில் நுண்கற் காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந் ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக வல்லு நர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தொல்லியல் மேடு தற்போதைய நிலப்பரப்பில் இருந்து 2 மீட்டர் உயரம் கொண்டது எனவும் இங்கு உலோக காலத்தைச் சேர்ந்த மட்கல ஓடுகள் மிகுதியாக சிதறிக்கிடக்கின்றன எனவும், இந்த மேட்டில் நுண்கற் கருவிகள், பல்வேறு வகை யான மணிகள், அலங்கரிக் கப்பட்ட சங்கு வளையல்கள், காதணிகள், சுடுமண்ணால் ஆன வட்டுகள், இரும்புக் கசடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
தற்போது மேற்கொள்ளப் படவுள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ந்து நிலவியல் உரு வாக்கத்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண் கற்கருவிகளை சேகரிப் பதாகும். இந்த அகழாய்வின் மூலம் தமிழகத்தின் பண்டைய பாரம்பரியம், நாகரிகம் கலை நுணுக்கங்களை உல கிற்கு பறைசாற்றிட பேருதவி யாகவும் ஆதாரமாகவும் அமையும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின் றனர்.