districts

img

வாலிபர் சங்க ரத்ததான முகாம்

உதகை, மார்ச் 11- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பில் ரத்ததான முகாம் நடை பெற்றது.  நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்தான முகாம் மற்றும்  ரத்தவகை கண்டறியும் பரிசோதனை முகாம் நடை பெற்றது. இம்முகாமிட்டு ஏரியா கமிட்டி செயலாளர் ராசி ரவிக்குமார் தலைமை வகித்தார். தலைவர் பெரி யார் மணிகண்டன் வரவேற்றார். வாலிபர் சங்க நீலகிரி மாவட்டச் செயலாளர் சுதர்சன் முகாமை துவக்கி வைத் தார். இதில், கூடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்  திராவிட மணி, நெல்லியாலம் நகர்மன்றத் தலைவர் சிவ காமி, துணைத்தலைவர் பெ.நாகராசா, சிபிஎம் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் பி.ரமேஷ், பந்தலூர் வியா பாரிகள் சங்கத்தின் தலைவர் அஷ்ரப், வட்டார மருத் துவ அதிகாரி மருத்துவர் கதிரவன் உள்ளிட்டோர் பங் கேற்று வாழ்த்தி உரையாற்றினர். இம்முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். ஏராளமானோர் ரத்த வகையை பரிசோதனை மேற்கொண்டு பலன் அடைந்தனர். முடிவில், வழக்கறிஞர் சுபாஷ் நன்றி கூறினார்.