திருச்சிராப்பள்ளி, ஏப்.22-
மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமையன்று புரட்சியாளர் விளாடிமிர் லெனின் பிறந்தநாள் பேரணி மற்றும் சங்க புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு கிளைத் தலைவர் மதிய ழகன் தலைமை வகித்தார். கிளைச் செயலா ளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேதுபதி சங்கக் கொ டியை ஏற்றி வைத்து, பேரணி மற்றும் புதிய கிளையை துவக்கி வைத்தார். விழாவில், மாவட்ட துணைச் செயலாளர் சந்துரு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் லோகு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.