districts

img

வாலிபர் சங்க பொன் விழா: நன்னிலத்தில் விளையாட்டுப் போட்டிகள்

நன்னிலம், ஜன.17 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன் விழா  மற்றும் பொங்கல்-உழவர் பெருநாளை யொட்டி சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள் நன்னிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன. வாலிபர் சங்க முன்னாள் ஒன்றிய செயலாளரும், சிபிஎம் ஒன்றிய குழு  உறுப்பினருமான பி.ஸ்டாலின் தலைமை வகித்தார். சங்கத்தின் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் எம்.பாலச் சந்தர், டி.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தியாகி நாவலன், மறைந்த மூத்த தோ ழர்கள் டி.பி.ராமச்சந்திரன், டி.எஸ். பரமசிவம் ஆகியோர் நினைவிடத்தி லிருந்து துவங்கிய ஒலிம்பிக் ஓட்ட சுடரை சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம்  துவக்கி வைத்தார். ஒலிம்பிக் சுடர் பேரளம் கடைவீதி வழி யாக, ரயில்வே சாலையை கடந்து திரு மீயச்சூரில் அமைக்கப்பட்ட விழா மேடைக்கு சென்றடைந்தது. ஒலிம்பிக் சுடரை சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ. உதுமான் பெற்றுக் கொண்டார். வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.சுரேந்தர் வெண்கொடியை ஏற்றி னார். பெற்றோர் - ஆசிரியர் கழக தலை வர் ஆர்.மேகநாதன் போட்டிகளை துவக்கி வைத்தார். சிறுவர், சிறுமி களுக்கான ஓட்டப் பந்தயம், பலூன் ஊதி  உடைத்தல், பெண்கள் கலந்து கொண்ட  விளையாட்டுப் போட்டிகள், ஆண்களுக் கான 1000 மீட்டர் ஓட்டப்பந்தயம், கபடி  போட்டிகள் என மாலை வரை நடைபெற் றன.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கியும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பி னர் டி.வீரபாண்டியன், நகர செயலாளர்  சீனி.ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பி னர் ஆர்.சுந்தரமூர்த்தி, வாலிபர் சங்க  மாவட்ட செயலாளர் கே.பி. ஜோதிபாசு,  தலைவர் எஸ்.எம். சலாவுதின் உட்பட  சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.