districts

திருச்சி முக்கிய செய்திகள்

அரசுப் பள்ளியில் இளைஞர்  விழிப்புணர்வு பேரணி

அரியலூர், பிப்.9- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில், கலை ஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலை மையாசிரியை முல்லைக் கொடி துவக்கி வைத்தார்.  நிகழ்வில் பாவை.சங்கர்  கலைஞர் நூற்றாண்டு விழாவில் இளைஞர் களின் பங்கு பற்றி சிறப்பு ரையாற்றினார். பேரணி யானது பள்ளியில் துவங்கி, ஊரின் முக்கிய  வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடி வடைந்தது.

திறன்  மேம்பாட்டு  பயிலரங்கு

பாபநாசம், பிப்.9 - பாவை பரஸ்பர ஸகாய நிதி லிட், ‘நீ தான்’ அறக்கட்டளை இணைந்து பொதுத் தேர்வை எதிர்க் கொள் ளும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயி லரங்கை நடத்தின. தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ் தலம் மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இப்பயிலரங்கில், பயிற்றுநர் கவி முருக பாரதி தேர்வை எதிர் கொள்வது குறித்து பேசி னார். நிகழ்ச்சிக்கு மோகன் தலைமை வகித் தார். இதில் 10, 11, 12  ஆம் வகுப்பு மாண வர்கள் பங்கேற்றனர்.

காலமானார்

திருச்சிராப்பள்ளி, பிப்.9 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி  மாவட்டம் மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றிய முன்னாள் செய லாளர் தோழர் எம்.ஜி. ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் வெள்ளி யன்று காலமானார்.  அன்னாரது உடல்  கட்சியினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக மண்ணச்சநல்லூர் காந்தி நகர் 8 ஆவது கிராஸில்  உள்ள அவரது இல்லத் தில் வைக்கப்பட்டுள் ளது. சனிக்கிழமை காலை அவரது இறுதி  நிகழ்ச்சி நடைபெறு கிறது.

தஞ்சை பெரியகோயிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், பிப்.9-  தஞ்சாவூர் பெரியகோயி லில் ஆண்டு தோறும் சித்தி ரைப் பெருவிழா 18 நாட் களுக்கு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சித்தி ரைப் பெருவிழா ஏப்ரல் 6 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  இதில், சித்திரைத் தே ரோட்டம் ஏப்ரல் 20 அன்று  நடைபெறவுள்ளது. இவ் விழா ஏப்ரல் 23 அன்று நிறை வடைகிறது.  இதையொட்டி, பெரிய கோயில் வளாகத்தில் பந்தல்  கால் நடும் நிகழ்ச்சி வியா ழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால்  நடப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் அரண்மனை தேவஸ் தான உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலு வலர் ப.மாதவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

பிப்.12-இல் தொழில்பழகுநர் சேர்க்கை முகாம்

கரூர்/புதுக்கோட்டை, பிப்.9 - பிப்ரவரி 12 அன்று தேசிய தொழில்பழகு நர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. தேசிய தொழில்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக கரூர்  மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வெண்ணைய்மலை, கரூர் வளாகத்தில் 12. 2.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை நடைபெற உள்ளது. அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங் களில் பயின்று வெற்றிகரமாக பயிற்சியை முடித்து இதுவரை தொழில்பழகுநர் பயிற் சியை மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்வி, சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட்  அளவு போட்டோ-2, ஆதார் அட்டை, தேசிய,  மாநில தொழில் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் இம்முகாமில் பங்கேற்கலாம். தொழில்பழகுநர் திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்க ளது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் பழகுநர்களின் வெட்புலத்தினை நிறைவு செய்திடும் பொருட்டு, உரிய நிறுவன பதா கைகளுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழில்பழகுநர்களை தேர்வு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு உதவி இயக்கு நர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2ஆம்  தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், வெண்ணைய்மலை, கரூர்-639006  என்ற முகவரி மற்றும் தொலைபேசி (04324- 299422, 7904175232, 9443015914) வாயிலாக தொடர்பு கொண்டு அறியலாம் என மாவட்ட  ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை புதுக்கோட்டையில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள  இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறை யைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு தங்களது நிறுவனங் களுக்கு தேவையான தொழில்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், 10, 12,  பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர் களும் கலந்து கொண்டு தொழில்பழகுந ராக சேர்ந்து கொள்ளலாம் என மாவட்ட  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்து உள்ளார்.

ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

கும்பகோணம், பிப்.9- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றிய பள்ளிகளின் ஜேஆர்சி மாணவர்களுக் கான ஒரு நாள் பயிற்சி முகாம் கும்பகோணம்  கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. துவக்க விழாவில் கும்பகோணம் கார்த்தி  வித்யாலயா பள்ளி குழும தலைவர் கார்த்தி கேயன்  கொடியேற்றினார். பன்னாட்டு பள்ளி  தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் நிறுவனர்  படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ஜே ஆர்சி மாணவர்களுக்கு ஜேஆர்சி வரலாறு,  ரெட் கிராஸ் வரலாறு, நோக்கம், கொள்கை கள் மற்றும் பாடல் பயிற்சிகளை பயிற்றுநர் ஏ. காளிதாஸ் அளித்தார்.  மாலையில் நடந்த நிறைவு விழாவிற்கு கும்பகோணம் கல்வி மாவட்ட கல்வி அலு வலர் (இடைநிலை) நா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் கோ.அமலா தங்கத் தாய் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட ஜே.ஆர்.சி இணை கன்வீனர் கே. செல்வமணி வரவேற்றார்.  பயிற்சி முடித்த ஜேஆர்சி மாணவர்களுக்கு,  தஞ்சாவூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் துணை சேர்மன் எஸ்.முத்துக்குமார், மேலாண்மை குழு உறுப்பினர் ஜி.ஜெயக் குமார் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி னர். திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஜேஆர்சி கவுன்சிலர் முருகானந்தம் நன்றி  தெரிவித்தார். இம்முகாமில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 

கடற்கரை காவல்நிலைய பணிகள்: மாணவர்களுக்கு செயல் விளக்கம் 

தஞ்சாவூர், பிப்.9-   தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள  சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தில், பள்ளி மாணவர்களுக்கு கடற்கரை காவல் நிலையங் களின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப் பட்டது. பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல்  துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமை வகித்து  பேசுகையில், “இந்திய கடல் எல்லைகளில் ரோந்து பணி களை மேற்கொள்வது, போதைப் பொருள் கடத்தல்களை  தடுப்பது, கடற்கரை சூழலியலை காப்பது, வேட்டை யாடுபவர்களை பிடிப்பது, மீனவர்களுக்கு உதவுவது போன்ற பணிகளை கடலோர காவல்படை மேற்கொண்டு  வருகிறது. இது மட்டுமல்லாமல் கடல் கொள்ளையர் களை தடுக்கும் நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு  மேற்கொண்டு வருகிறது என்றாலும், இது கடற்படை  மற்றும் பிற நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறு கிறது” என்றார். தொடர்ந்து, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கடற்கரை காவல் நிலையங்களின் செயல்பாடுகள், உபகர ணங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமை காவலர் கோபால், காவலர்கள், புதுப்பட்டி னம் அபு மெட்ரிக் பள்ளி, சேதுபாவாசத்திரம் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை, பிப்.9- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை யின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும்  முகாமினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை ராணியார் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “தேசிய குடற்புழு  நீக்க மருந்தானது, 1 முதல் 19 வயதுடைய குழந்தை களுக்கும், 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கும் (கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் நீங்கலாக) வழங்கப் படுகிறது. மேலும் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும்  (200 மி.கி.), 2 முதல் 19 வய துடைய குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கு ஒரு மாத்திரையும் (400 மி.கி) வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார் கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலு வலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் குடற்புழு நீக்க  மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது” என்றார். பின்னர்  தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெண் குழந்தைகளின் முக்கியத்துவம்: விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைப்பு

புதுக்கோட்டை, பிப்.9 - பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ், பெண் குழந்தை களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வெள்ளிக்கிழமை கொடியசைத்து துவக்கி  வைத்தார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், மாவட்டத்தில் குழந்தை பாலின விகிதம் மற்றும் பிறப்பு பாலின விகி தத்தை உயர்த்துதல், பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகளின் பிறப்பினை உறுதி செய்து அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பை உறுதிப்படுத்துதல். பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகப்படுத்துதல் மற்றும் தொடர்ந்து கல்வி பெறுவதை உறுதிசெய்தல். வளரிளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் மாதவிடாய் பற்றிய கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யப்பட உள்ளது” என்றார்.

பேராவூரணி காட்டாற்றின் குறுக்கே  புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டல்

தஞ்சாவூர், பிப்.9-  பேராவூரணி காட்டாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டு வதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவா சத்திரம் சாலையில், பூனைகுத்தியாற்றின் குறுக்கே, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கி ணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ்,  முசிறி - குளித்தலை - புதுக்கோட்டை - ஆலங்குடி - பேரா வூரணி - சேதுபாவாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில் ரூ.8.37 கோடி மதிப்பீட்டில், உயர்மட்டப் பாலம் 12 மீட்டர்  அகலம், 71 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணி துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற  உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நெடுஞ் சாலைத்துறை (திட்டங்கள் அலகு) உதவிப் பொறியா ளர் அன்சாரி ராஜா முன்னிலை வகித்தார்.  திமுக உறுப்பினர்கள், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்  குழு துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, பேரா வூரணி பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல்,  பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

பொதுத்தேர்வு விழிப்புணர்வு

பாபநாசம், பிப்.9 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா கல்விச் சங்கம் சார்பில் பாபநாசத்தை அடுத்த  திருக்க ருக்காவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு  குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் நேரு தலைமை வகித்தார்.  விவேகானந்தா கல்விச் சங்க தலைவர் தேவராஜன் முன் னிலை வகித்தார். விவேகானந்தா கல்வி சங்க செயலர்  கண்ணதாசன், பொதுத் தேர்வில் வெற்றி பெறுவது,  இலக்கை நோக்கி பயணிப்பது, புரிந்து படிக்கும் வழி முறை, பயமின்றி தேர்வு எழுதுவதற்கான வழிமுறை குறித்து விளக்கினார்.

ஆடுதுறை அரசுப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற விழா

கும்பகோணம், பிப்.9- தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டம் திரு விடைமருதூர் வட்டம் ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாது காப்பு மன்ற விழா நடைபெற்றது.  விழாவை அரசுப் பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றமும், கும்பகோணம் வட்டார  வரலாற்று ஆய்வு சங்கமும் இணைந்து நடத்தின. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசி ரியர் வெற்றி. திருநாவுக்கரசு தலைமை வகிக்க, தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின்  பொறுப்பாசிரியர் மாரியப்பன் வரவேற்புரை யாற்றினார். “தொன்மையைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது.  இதில் வரலாற்று ஆய்வு சங்க நிறுவனர்  கும்பகோணம் ஆ.கோபிநாத் சிறப்புரை யாற்றினார்.  அப்போது, திருக்கோயில் பழமையும்,  கல்வெட்டுகள் சிறப்பும், சோழர் வர லாற்றையும் விளக்கி மாணவர்களுக்கு கூறி னார். மேலும் அருகில் உள்ள கோயில் களைப் பற்றிய முக்கியத்துவத்தை, அந்தந்த  பகுதி மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது,  கோயில்களைப் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம், ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனித் தன்மைகள், சிறப்புத் தன்மை களை வெளியுலகிற்குக் கொணர்தல், கோயிலை நன்கு பராமரிப்பது பற்றியும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களுக்கு அவரவர் பகுதியில் உள்ள தொன்மை சின்னங்கள் பற்றிய ஆர்வத் தினை தூண்டும் பொருட்டு, கலந்து கொண்ட  64 மாணவர்களும் தனித்தனியாக கட்டுரை எழுதவும், அதனை புத்தகமாக கொண்டு வர லாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள் செல்வ ராஜ், ரமணி.மகேஸ்வரி ஆகியோர் கலந்து  கொண்டனர். மன்றச் செயலாளர் மாணவி யாழினி நன்றி கூறினார்.

கடலூர் மாவட்ட இணைப்புச் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பை சொந்த செலவில் அகற்றிய ஊராட்சி மன்றத் தலைவர்

அரியலூர், பிப்.8 - கடலூர் மாவட்ட இணைப்புச் சாலை யில் உள்ள ஆக்கிரமிப்பை தனது சொந்தச்  செலவில் ஊராட்சி மன்றத் தலைவர் அகற்றி னார். அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடி கிராமத்திலிருந்து கடலூர் மாவட்டத்தை இணைக்கும் மேலணைக்குழி கிராமம் வரை 30 மீட்டர் அகலம் கொண்ட நெடுஞ்சாலை பயன்பாட்டில் இருந்தது. காலப் போக்கில் இது பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது  வெறும் 10 மீட்டர் மட்டுமே அகலம் கொண்ட  சாலையாக உள்ளது. இந்நிலையில், 2 கிலோ‌மீட்டர் தொலை விலான இந்த இணைப்புச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றி, போக்கு வரத்து பாதிப்பு இல்லாமல் செய்ய வேண் டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து நீதி மன்ற உத்தரவின்படி, ஊராட்சி மன்றத் தலை வர் முத்துக்குமாரசாமி தனது சொந்தச் செல வில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார். இவர், ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து நீர் ஆதா ரத்தை காக்கும் வகையில் நீர்நிலை ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், வடிகால் வசதி  ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை ஆக்கிர மிப்பு அகற்றுதல் என பல்வேறு தடைகளை  தாண்டி, அனைத்து விதமான ஆக்கிரமிப்பு களையும் அகற்றி வருகிறார்.   தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் ஊராட்சி மன்றத் தலைவரின் இச் செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டு கின்றனர்.

நத்தம் பகுதியில் சுங்கச்சாவடி திறப்பு

நத்தம், பிப்.8- மதுரையில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சி வரை உள்ள நான்கு வழிச்சாலையில் பரளிபுதூர் பகுதி யில் புதியதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வியாழனன்று காலை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.  இந்த சுங்கச்சாவடியில் 10 அறைகளும், வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உயர் கோபுர மின் விளக்குகள், 2 ஆம்புலன்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிக்க காருக்கு ரூ.180-ம். சென்று திரும்புவதற்கு ரூ.270-ம், பேருந்திற்கு ரூ.605-ம்.சென்று திரும்புவதற்கு 990-ம், மினி வேனுக்கு ரூ.290-ம், சென்று திரும்புவதற்கு ரூ.435-ம், டிப்பர் லாரிகளுக்கு ரூ.660-ம், சென்று திரும்புவதற்கு ரூ.905ம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடி நத்தத்தில் இருந்து 18 கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து 17 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.